districts

img

குத்துவிளக்கு தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி வலியுறுத்தல்

கும்பகோணம், ஜூலை 7-

   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமரு தூர் தெற்கு ஒன்றியம் சார்பில் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம், கட்சி நிதி அளிப்பு, தீக்கதிர் சந்தா வழங்கல் ஆகிய நிகழ்ச்சிகள் நாச்சி யார்கோவில் கடைத்தெருவில் நடை பெற்றன.

    கூட்டத்திற்கு திருவிடைமருதூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.பழனிவேல்  தலைமை வகித்தார். நாச்சியார்கோ வில் கிளைச் செயலாளர் பார்த்திபன் முன்னிலை வகித்தார். கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டி யன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜெயபால், ஆர்.மனோகரன் ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.

   கூட்டத்தில் உ.வாசுகி பேசுகை யில், “நாச்சியார்கோவில் குத்து விளக்கு புவிசார் குறியீடு பெற்றுள்ளது. ஆனால் குத்துவிளக்கு தொழிலாளர் களுக்கு நிரந்தர வருமானமோ, ஓய்வூ தியமோ இல்லை. இவர்கள் வாழ்நாள்  முழுவதும் பணி செய்து, பணி பாது காப்பு ஏதுமின்றி உள்ளனர். குத்து விளக்கு தொழிலில் ஈடுபடும் தொழி லாளர்களுக்கு சமூக பாதுகாப்பும் பணி  பாதுகாப்பும் வழங்க வேண்டும்.  அதே போன்று, விவசாயிகளுக்குத் தேவை யான அடிப்படை வசதிகளையும் தமிழக அரசு செய்து தர வேண்டும்” என்றார்.

    நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் ஜி.முருகன், மாத்தூர் கிளை செயலாளர் ஆரோக்கிய தாஸ், வாலிபர் சங்க ஒன்றியச் செயலா ளர் பிரேம்நாத், விவசாயத் தொழிலா ளர் சங்க ஒன்றியச் செயலாளர் என். சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     முன்னதாக மாத்தூரிலிருந்து செங்கொடி பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கட்சியின் வளர்ச்சி நிதி யாக பொதுமக்களிடம் வசூல் செய்யப் பட்ட ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்  மற்றும் தீக்கதிர் நாளிதழின் 20 சந்தாக் களுக்கான தொகையும் மத்தியக் குழு  உறுப்பினர் உ.வாசுகியிடம் வழங்கப் பட்டது.