திருநெல்வேலி, ஆக. 6-
வீரவநல்லூர் பாரதிநகரைச் சேர்ந்தவர் அப்துல் காதர் ஜெயிலானி (33). இவருக்கும், சேரன்மாதேவி சுண்ணாம்பு கல் தெருவை சேர்ந்த சேர்மதுரை (27) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சேர்மதுரை, அப்துல் காதர் ஜெயிலானி வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து சேதப்படுத் தினார். இதுகுறித்து அப்துல் காதர் ஜெயிலானி புகார் அளிப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ஜமால் முகமது அலி என்பவரின் காரில் சென்ற போது, காரின் பின்பக்க கண்ணாடியை சேர்மதுரை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் பவுலோஸ் வழக்கு பதிந்து சேர்மதுரையை கைது செய்தார்.