திருச்சிராப்பள்ளி, பிப்.25 - வளர்ச்சித் திட்டங்களை இலக்கு சார்ந்த திட்டமாக செயல்படுத்துவதை கைவிட வேண்டும். திட்டங்களை நேர்மையான முறையில் செயல்படுத்த ஊக்கப்படுத்த வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு போதுமான ஊழியர் கட்டமைப்பை உடனே ஏற்படுத்த வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டங்களுக்கு உடனுக்குடன் நிதி விடு விக்க வேண்டும். இரவு 10 மணிக்கு மேல் நடைபெறும் ஆய்வுகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வியாழ னன்று திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட தலைவர் ஜாகிர் உசேன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பழனி யப்பன், மாவட்டச் செயலாளர் வேலாயுதம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசி னர். இதில் ஊரக வளர்ச்சித் துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.