பேராவூரணி, மே 10-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட் டாரத்திற்கு உட்பட்ட அரசுப்பள்ளி, அங் கன்வாடியில் படிக்கும் மூன்று மாண வர்களுக்கு இதயத்தில் பாதிப்பு இருப் பது கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக் காக கோவை தனியார் மருத்துவ மனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
பேராவூரணி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் தருண் கோவிந் தன் (11), பிரித்திவிராஜ் (15), புனல் வாசல் கிராமத்தை சேர்ந்த அங்கன்வாடி குழந்தை சப்ரின் ஜோ (4) ஆகிய மூவ ருக்கும் பரிசோதனையில் இதயக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில், இதய ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டனர். இதில், அறுவை சிகிச்சை ஒன்றே குழந்தைகளுக்கு நிரந்தர தீர்வு என தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் அறிவுரை கூறினர்.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாத பொருளாதார வசதி குறைவான மாணவர்களின் பெற்றோ ருக்கு உதவி செய்யும் வகையில், தஞ்சா வூர் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் மற்றும் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ஆகியோரின் வழிகாட்டுத லின்படி, பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தரராஜன் ஏற்பாட்டில் கோவை தனியார் மருத்துவமனையில் அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச் சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், முதல்கட்ட பரிசோத னைக்கு ஆரம்ப சுகாதார நிலைய செவி லியர்கள் மற்றும் குழந்தைகள், பெற் றோர்கள் அரிமா சங்க நிதி உதவியில் கோவைக்கு தனி வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.