districts

img

குமரப்பா பள்ளியில் உணவுத் திருவிழா

குமரப்பா பள்ளியில் உணவுத் திருவிழா தஞ்சாவூர், மார்ச்.7 -  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி டாக்டர் ஜே.ஸி.கே சி.பி.எஸ்.இ வித்யா லயா பள்ளியில் உணவுத் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, தமிழ் நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, அறங்காவலர் ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சுபா வரவேற்றார். குமரப்பா அறக்கட்டளை பொருளாளர் அஸ்வின் கணபதி உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்துப் பேசினார். விழாவில், மாணவர்கள் தங்களது வீட்டில் சமைத்த மட்டன், சிக்கன் பிரியாணி, தயிர் சாதம், நூடுல்ஸ், சப்பாத்தி, கேசரி, கூல், பாயாசம், ஸ்வீட், ஜூஸ், பழங்கள் என பல்வேறு வகையான உணவுப் பொருட்களை சக மாணவர்களுக்கு வழங்கி பகிர்ந்து உண்டனர். இதில்,  அறங்காவலர்கள் கணபதி, ஆனந்தன், நபிஷா பேகம், நிர்வாக அலு வலர் சுரேஷ், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, ஆசிரியர் அஞ்சுகா தேவி நன்றி கூறினார்.