districts

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக.19- காலைச் சிற்றுண்டித் திட்டத்தை சத்துணவு மையங்கள் மூலம் சத்துணவு ஊழி யர்களை கொண்டு அமல்படுத்த வேண்டும்,  காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்  என்பன  உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மணிகண்டம் ஒன்றியக் கிளை  சார்பில் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு நளினி தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் பெரியசாமி, மாவட்டப் பொருளாளர் கிரேஸி லில்லிசந்திரா, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர். தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் ஆவணத்தில் உள்ள பேராவூரணி ஒன்றிய அலுவலக வளா கத்தில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பேராவூரணி ஒன்றிய சத்துணவு ஊழியர் சங்க வட்டத் தலைவர் தேவதாஸ், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் மகேஷ், மாவட்டத்தலைவர் ரவிச்சந்திரன், அரசு ஊழியர் சங்க பேராவூரணி வட்டச் செயலாளர் ரமேஷ், ஜாக்குலின் மேரி ஆகியோர் பங்கேற்றனர். கும்பகோணம் மாநகராட்சி அலுவல கத்தில்  நகர்த் தலைவர் ஏ.ஆர்.கவிதா, கும்ப கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செந்தாமரை,   திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மணிமேகலை, திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்தில்  மதி வாணன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. திருவாரூர் திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஊராட்சி  ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைப்பின் ஒன்றியத்  தலைவர் ஆர்.கற்பகம், ஒன்றியசெயலாளர் எஸ்.கோதையம்மாள், பொருளாளர் எஸ்.லதா, அரசு ஊழியர் சங்க மாவட்டத்துணைத் தலைவர் வி.தெட்சிணாமூர்த்தி, மாநிலச்  செயற்குழு உறுப்பினர் எஸ்.வெற்றிச் செல்வி, மாவட்டத் தலைவர் கே.பாலசுப்பிர மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.