நாடாளுமன்ற தேர்தலையொட்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள், வேட்பாளர்கள் தேர்தல் செலவினம் கணக்கீட்டாளர்கள் ஆகியோருக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஏ.பி.மகாபாரதி, தேர்தல் செலவின பார்வையாளர் வீ.டி.எஸ்எஸ்.நாகர்ஜீன் கிரான்டி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.