தஞ்சாவூர், ஏப்.29 - தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசுக் கல்லூரி வளாகத்தில் ட்ரோன் கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள் ளது என என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்திருப்பதாவது: தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான, மக்களவை பொதுத் தேர்தல் கடந்த ஏப்.19 அன்று முடி வடைந்துள்ள நிலையில், நாடாளு மன்ற தொகுதிக்குட்பட்ட மன்னார்குடி, திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்த நாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் அனைத்தும் சட்டமன்றத் தொகுதி வாரியாக, தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும், ஜூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடை பெறும்வரை பாதுகாப்பாக வைக்கப் படுவதை உறுதி செய்யும் வகை யில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கு பாதுகாப்பில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் ஆயுதம் ஏந்திய நிலை யில் சுழற்சி முறையிலும், இரண்டா வது அடுக்கு பாதுகாப்பில், தமிழ்நாடு சிறப்பு படை காவலர்கள் ஆயுதம் ஏந்திய நிலையில் சுழற்சி முறையிலும், மூன்றாவது அடுக்கு பாதுகாப்பில் தமிழ்நாடு மாநில காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பாதுகாப்பிலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளன. இது தவிர வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டு உள்ள அறைகள் மற்றும் கல்லூரி வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண் காணிக்கப்பட்டு வருகிறது. கண்கா ணிப்பு பணிகளை வேட்பாளர்கள் மற்றும் அவர்களது சார்பில் முகவர்கள் கண்காணிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டு கண்காணித்து வரு கின்றனர். மேலும், தீத்தடுப்பு உபகர ணங்கள் பொருத்தப்பட்டும், 24 மணி நேர தீயணைப்பு வண்டிகள் மற்றும் வீரர்கள் தயார் நிலையிலும் வைக்கப் பட்டுள்ளனர். வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் பாதுகாப்பில் வைக்கப்பட் டுள்ள கல்லூரி வளாகம் முழுமைக் கும் தடையற்ற மின்சாரம் வழங்கு வதற்கு விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்கள் உள்ளிட்ட வீடியோ கேம ராக்கள் மற்றும் ஆளில்லா விமானம் போன்றவை பறக்க அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.