கோவை, ஆக.23-
ஆன்லைன் விற்பனை, விவசா யிகளிடமிருந்து நேரடி கொள்முதல் ஆகியவற்றால் பூக்கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ள தாக, வியாபாரிகள் தெரிவிக்கின் றனர்.
கேரளம் மாநில மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் நெருங்கி வரும் நிலையில், பூக்கள் சாகுபடி பல்வேறு இடங் களில் துரிதமாக நடைபெற்று வரு கிறது. ஓணம் பண்டிகை தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பூக் களின் வியாபாரம் துவங்கி விடும். கோவையை பொறுத்தவரை தொண் டாமுத்தூர், வடிவேலாம்பாளை யம் உள்ளிட்ட இடங்களிலிருந்து ஓணம் பண்டிக்கைக்கு முக்கிய மாக திகழும், செண்டுமல்லி பூக் கள், கோழிக்கொண்டை, வாடா மல்லி உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும், பல் வேறு மாவட்டங்களுக்கும் ஏற்று மதி செய்யப்படும். குறிப்பாக, கோவை பூ மார்க்கெட் பகுதியி லுள்ள மலர் சந்தையிலிருந்து டன் கணக்கில் பூக்கள் ஏற்றுமதி நடை பெறும். கோவை மக்களும் அதிகப் படியானோர் இங்கு வந்து தான் பூக் களை வாங்கி செல்வர். இந்நிலை யில், ஆன்லைன் விற்பனை, விவசா யிகளிடமிருந்து நேரடி கொள்முதல் உள்ளிட்ட காரணங்களால் மலர் சந்தையில் பூ வியாபாரம் மிக வும் பாதிக்கப்பட்டுள்ளதாக வியா பாரிகள் வேதனை தெரிவித்துள் ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் கூறுகையில், கடந்த 3, 4 வருடங்களாகவே ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடை பெறும் மலர் வியாபாரம் எதிர் பார்த்த அளவிற்கு இல்லை. கொரோ னாவிற்கு பிறகு வியாபாரமே மாறி விட்டது. முன்பெல்லாம் கோவை யிலிருந்து தான் கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும், பல்வேறு மாவட் டங்களுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படும். தற்போது மலர் உற் பத்தி செய்யப்படும் இடத்திற்கே சென்று பூக்களை வாங்கி கொள் கின்றனர். அதுமட்டுமின்றி வேலை இழந்த இளைஞர்களும், குழுவாக பூ வியாபாரம் செய்ய துவங்கி விட்ட தாலும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை நடைபெறுவதாலும் கடந்த சில வருடங்களாகவே மார்க் கெட் வியாபாரம் பாதிக்கப்பட்டு விட்டது. 300 டன் வரை பூக்கள் ஏற்று மதி செய்யப்படும் காலங்களை கடந்து, தற்போது 30 டன் 40 டன் செல்வதே சிரமமாக உள்ளது.
ஓணம் பண்டிகைக்கு குறிப் பிட்டு விற்பனை செய்யப்படும் செண்டுமல்லி, வாடாமல்லி, கோழிக் கொண்டை, உள்ளிட்ட பூக்கள் எல் லாம் அதிகமாகவே வந்துள்ளது. 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப் படும் பூக்கள் எல்லாம் வெறும் 20 முதல் 30 ரூபாய் வரையே விற்பனை செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இனி ஓணம் பண்டிக்கைக்கு ஒரு வார காலமே இருக்கின்ற நிலை யில், வியாபாரம் என்ன ஆகுமோ தெரியவில்லை? என்று வேதனை யுடன் தெரிவித்துள்ளனர்.