புதுக்கோட்டை, மே 23-
புதுக்கோட்டை புதுக்குளத்தில், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், வெள்ள அபாய காலங்களில் மக்களை பாதுகாப்பாக மீட்பது தொ டர்பான மாதிரி ஒத்திகைப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஒத்திகைப் பயிற்சியை பார்வையிட்ட பின்னர் புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரி வித்தது:
இந்த ஒத்திகைப் பயிற்சியில் நீரில் மூழ்கியவர் களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து மீட்புப் படை வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர். பொதுமக்;கள் அனைவரும் மழைக்காலங்களில் அரசின் வழிகாட்டு நெறி முறைகளை உரிய முறையில் பின்பற்றி பேரிடர்களி லிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார்.