தஞ்சாவூர், ஜன.25 - தஞ்சாவூரில் தனியார் நெல் அறுவடை இயந்தி ரங்களுக்கான வாடகை நிர்ணயம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில், விவ சாயிகள், நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள், அரசு அலுவலர்கள் பங் கேற்ற முத்தரப்பு கூட்டம் புதனன்று நடைபெற்றது. பின்னர் ஆட்சியர் கூறு கையில், “அனைத்து தரப்பி னரின் கருத்துகளை கேட்ட றிந்ததன் அடிப்படையில், பெல்ட் டைப் தனியார் நெல் அறுவடை இயந்திரங்க ளுக்கு மணி ஒன்றுக்கு வாட கையாக ரூ.2,500 எனவும், டயர் டைப் இயந்திரங் களுக்கு மணி ஒன்றுக்கு வாட கையாக ரூ.1,750 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிர்ணயம் செய்யப்பட்ட வாடகைத் தொகையை மட்டும் பெற்றுக் கொள்ள வேண்டும். கூடுதலாக விவ சாயிகளிடமிருந்து வாடகை வசூல் செய்தால், புகார் தெரிவிக்க விரும்பும் விவ சாயிகள், வருவாய் கோட்ட அலுவலர்கள், வட்டாட்சி யர்கள், வேளாண்மைத் துறை அலுவலர்களிடமும், மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கி வரும் 1077 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணிலும் புகார் தெரி விக்கலாம். மேலும், வேளாண் பொறியியல் துறை தஞ்சா வூர் செயற்பொறியாளர் எண்.90035-23343, தஞ்சாவூர் உதவி செயற்பொறியாளர் எண்.94431-17138, கும்ப கோணம் உதவி செயற்பொ றியாளர் எண்.94436-78621, பட்டுக்கோட்டை உதவி செயற் பொறியாளர் எண்.99761-93110 மற்றும் தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலு வலர் எண்.94420-93161, தஞ்சாவூர் மோட்டார் வாகன ஆய்வாளர் எண்.93848-08537, கும்பகோணம் மோட் டார் வாகன ஆய்வாளர் எண்.9994772510, பட்டுக் கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் எண். 93848- 08366 ஆகிய எண்களில் விவசாயிகள் தங்கள் புகார்களை வாட்ஸ்ஆப் மூலமாக தெரி வித்திடலாம். புகார் மனுக்களை நேரடியாக வட்டார போக்குவரத்து அலு வலகத்திலும் அளித்திட லாம். மேலும் வேளாண்மைப் பொறியியல் துறையின் பெல்ட் டைப் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத் திற்கு ரூ.1,880 எனவும், டயர் டைப் அறுவடை இயந்தி ரங்களுக்கு ரூ.1,160 எனவும் வழங்கப்பட்டு வரு கிறது. எனவே, விவசாயி கள் தனியார் இயந்திரங்கள் மட்டுமின்றி, வேளாண்மைப் பொறியியல் துறை அறுவடை இயந்திரங்களை யும் பயன்படுத்தலாம்” என்றார்.