districts

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த ஐந்து குடும்பங்கள்

சீர்காழி. ஜன.27 மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் ஆச்சாள் புரம் எம்.எஸ்.ஆர்.திருமண மண்டபத்தில் 24 ஆம் தேதி   மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்ளிடம் ஒன்றிய செயலா ளர் கே.கேசவன் தலைமையில்  பேரவைக்  கூட்டம் நடை பெற்றது. பேரவையில் மாவட்ட குழு உறுப்பினர் எல். சுந்தர லிங்கம் முன்னிலை வகித்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வி. சிங்காரவேலன் சிறப்புரையாற்றினார். பேரவை யில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஐந்து குடும்பத்தினர் தங்களை இணைத்துக் கொண்டனர்.

;