districts

தூத்துக்குடியில் மீன்பிடித் தடைக்காலம் அமல்

தூத்துக்குடி, ஏப்.15- தூத்துக்குடியில் மீன்களின் இனப் பெருக்க காலத்தை முன்னிட்டு 61 நாட்க ளுக்கு மீன்பிடி தடைக் காலம் அமலுக்கு  வந்தது. 497 படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. மீன்களின் இனப்பெருக்கத்திற்காக தமிழ கத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளை குடா மற்றும் பாக் நீரிணை கடல் பகுதி களில் ஏப்ரல், மே,ஜூன் மாதங்களில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும். அதன்படி  தமிழகத்தின் இந்த ஆண்டுக்கான மீன்பிடித்  தடைக்காலம் இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்த தடைக்காலத்தில் கன்னி யாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி,  ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 14 தமிழ்நாடு கட லோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்லமாட்டார்கள். தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரை தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத் தில் 256, திரேஸ்புரத்தில் 2 விசைப்படகுகள்,  வேம்பாரில் 39, தருவைகுளத்தில் 200 என  மொத்தம் 497 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.  மீன்பிடி தடைக்காலம் காரணமாக மாவட்டம் முழுவதும் விசைப் படகு மீன்பிடி தொழிலை நம்பி உள்ள சுமார்  20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை யின்றி சிரமப்படுவார்கள். மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி தமிழக அரசு  நிவாரணத் தொகையாக 6  ஆயிரம் ரூபாய் வரை வழங்குகிறது. இதை  ரூ.10 ஆயிரமாக உயர்த்தித்தர வேண்டும்  என மீனவ கிராமங்களைச் சேர்ந்த  மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து  உள்ளனர். இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களின் படகுகளைச் சீரமைத்தல், பராமரித்தல், வலை பின்னுதல் போன்ற பணிகளை மேற்கொள்வர்.