தஞ்சாவூர், அக்.7- ஒன்றிய அரசின் சாகர் பரிக்ரமா திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மாவட் டம் மல்லிப்பட்டினம் மற்றும் அதி ராம்பட்டினம் பகுதியில் சனிக் கிழமை ஒன்றிய மீன்வளம், கால் நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, ஒன்றிய மீன்வளத்துறை இணை அமைச்சர் முருகன் உள்ளிட்டோர் மீனவர்களிடம் குறை களை கேட்டறிந்தனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா பேசுகை யில், “விவசாயிகளுக்கு அளிக்கப்ப டும் கடன்அட்டை போல் மீன வர்களுக்கும் அட்டை வழங்க ஒன்றிய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடி ஆட்சி யில் ரூ.36 ஆயிரம் கோடி மீன வளத்துறைக்கு செலவழிக்கப்பட்டு உள்ளது. மீன்வளத் துறைக்குட் பட்டு 13 செயல்பாடுகள் உள்ளன. அதில் கடல்பாசி வளர்ப்பு, வண்ண மீன்கள் வளர்ப்பு உள்ளிட்ட உபரி தொழில்களும் உள்ளன. தொழில் நுட்ப வளர்ச்சியை மீனவர்கள் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார். நிகழ்ச்சியில், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், மீன்வளத் துறை இணை செயலர் நீத்து குமாரி, ஆட்சியர் தீபக் ஜேக்கப், மீன்வளத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி, தஞ்சாவூர் மாவட்ட மீன்வள உதவி இயக்குநர் மணி கண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மீனவர்கள் கோரிக்கை மல்லிப்பட்டினம் துறைமுகத் தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிப்பதற்கு வசதியாக, பழைய படகுகளுக்கு மாற்றாக ஆழ்கடலுக் கான படகு ஒன்றிய, மாநில அரசு களால் வழங்கப்படுகிறது. இதற் கான மானியத்தை உயர்த்தி ஒன்றிய அரசு வழங்க வேண்டும்.
மல்லிப் பட்டினம் துறைமுகத்தை ஒட்டி யுள்ள கட்டையப்பாடு, சின்னமனை ஆற்றின் முகத்துவாரங்களை ஆழப் படுத்த வேண்டும். பாக் வளைகுடா பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை உள்ள மீன்பிடி தடைக்காலத்தை, அக்டோ பர் 15 முதல் டிசம்பர் 14 வரை யாக மாற்ற வேண்டும். மீனவர் களுக்கு வழங்கும் டீசலை உற்பத்தி விலைக்கே ஒன்றிய அரசு வழங்க வேண்டும். கடலில் மீனவர் களுக்கு உடல் நலக்குறைபாடு ஏற்பட் டாலோ, இயற்கை இடர்ப்பாடு களில் சிக்கி பாதிக்கப்பட்டாலோ உடனடியாக அவர்களை கரைக்கு கொண்டு வரும் வகையில், படகு ஆம்புலன்சை ஒவ்வொரு மாவட்டத் திற்கும் வழங்க வேண்டும். மீனவர்கள் எல்லை தாண்டி விட்டால், இலங்கை கடற்படையி னர் பொருட்களை வீசி சேதப்படுத் துகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும். மீனவர்களுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் இன்சூ ரன்ஸ் பிரீமியம் செலுத்தி, பாதிக்கப் பட்ட மீனவர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தடைக்கால நிவாரணத்தை 5 ஆயி ரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும்” என்ற னர். மீனவர் பேச தடை மீனவர்கள் கோரிக்கை தொடர் பாக பேசுகையில், அதே பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் பேசத் தயாரான போது, இணை அமைச் சர் முருகன் ‘வேண்டாம்’ என அதி காரிகளிடம் தெரிவித்தார். இதைய டுத்து அந்த மீனவரிடம் கேட்ட போது, “எனது பெயர் நூருல் அமீன். இந்த ஊரைச் சேர்ந்த நான், மீன வர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். எதனால் ஒன்றிய இணை அமைச்சர் என்னை பேச அனுமதிக்கவில்லை எனத் தெரிய வில்லை. எனது அதிருப்தியை அமைச்சரிடம் நேரடியாக தெரி வித்துவிட்டேன்” என்றார்.