தஞ்சாவூர், மார்ச் 13- தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை யில் பந்தல் அலங்காரப் பொருட்கள் குடோ னில், செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பி லான பொருட்கள் எரிந்து நாசமாகின. தஞ்சாவூர் அருளானந்த நகரைச் சேர்ந்த வர் பந்தல் சிவா என்ற ஆர்.சிவசுப்பிரமணி யன் (58). பந்தல் ஒப்பந்தக்காரரான இவர், பந்தல், அலங்கார வளைவுகள் அமைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இதற்காக இவர் பந்தல், மேடை அலங்காரம், கட் அவுட் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களுக்கு அமைக்க பயன்படுத்தப்படும் பொருட்களை தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டையில் உள்ள குடோனில் வைத்திருந்தார். தமிழகம் மட்டுமில்லாமல், தென் மாநிலம் முழுவதும் நடைபெறும் பல்வேறு அரசி யல் கட்சி நிகழ்ச்சிகள், மாநாடுகள், சுப முகூர்த்த நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு விழாக்களுக்கு பந்தல், அலங்கார வளைவு கள், கட்அவுட் அமைக்க இந்த குடோனில் இருந்துதான் பொருட்களை கொண்டு செல்வார்கள். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதி காலை சுமார் 2 மணியளவில் இந்த பந்தல் குடோன் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. அந்த தீ மளமளவென பரவி குடோன் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்த தால், அந்தப் பகுதி முழுவதும் தீப்பிழம் பாக காட்சியளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்து, தஞ்சாவூர் தீயணைப்புத்துறை வீரர்கள் 4 வாகனங்க ளில் விரைந்து வந்து, சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், குடோனில் இருந்த பந்தல் சம்பந்தப்பட்ட அனைத்துப் பொருட்களும் எரிந்து சேதமாயின. இவற்றின் மதிப்பு ரூ.2 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படு கிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.