districts

தீக்கதிர் செய்தி எதிரொலி மாடுகளை சாலையில் விட்ட உரிமையாளர்களுக்கு அபராதம்

கும்பகோணம், டிச.5 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிப் பகுதிகளில் பொது மக்க ளுக்கும் போக்குவரத்திற்கும் அச்சுறுத்தலை  ஏற்படுத்தும் வகையில் சாலையில் சுற்றித் திரி யும் மாடுகள் பிடிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட வேண்டும். அண்மையில் சாலை யில் திரிந்த மாடு முட்டி ஒருவர் இறந்ததற்கு  யார் பொறுப்பு என்பது குறித்து மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பி னர் செல்வம், மாமன்றக் கூட்டத்தில் பேசி னார். இதுகுறித்து தீக்கதிர் நாளிதழில் செய்தி  வெளியிடப்பட்டது.  இந்நிலையில், கும்பகோணம் மாநக ராட்சிப் பகுதிகளில் மக்களுக்கு அச்சுறுத் தலை ஏற்படுத்தும் வகையில் சாலையில் திரி யும் மாடுகளைப் பிடிக்க, மாநகராட்சி ஆணை யர் உத்தரவிட்டார். அதன்படி முக்கிய வீதி களில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களிடம் அபராதம் பெறப் பட்டு ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், சாலையில் திரியும் மாடு களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்ப தால் மாநகர் மன்ற ஒப்புதலின் பேரில், மாடு களுக்கு ரூ.10,000 மற்றும் கன்றுக்கு ரூ.5,000 என அபராதம் விதிக்கப்பட்டு மாடுகள் விடு விக்கப்பட்டன. ஆனால் மாடுகளின் உரிமை யாளர்கள், மாநகராட்சி உரிமம் பெறாமலும்  தங்களது சொந்த இடத்தில் மாடுகளை  வளர்க்காமலும் சாலையில் போக்குவரத் திற்கு இடையூறாக மீண்டும் திரிய விடு கிறார்கள். எனவே மாடு வளர்ப்பவர்கள் உட னடியாக மாநகராட்சி உரிமம் பெற்று தங்க ளது சொந்த இடத்தில் வளர்க்க வேண்டும்.  ஆய்வின் போது, மாடுகள் சாலையில் திரிவது கண்டறியப்பட்டால், அவை மாநக ராட்சியால் பிடித்து அப்புறப்படுத்தப்படும். அபராதக் கட்டணம் செலுத்தினாலும் மாடுகள்  கண்டிப்பாக விடுவிக்கப்பட மாட்டாது. ஆகவே, மாட்டின் உரிமையாளர்கள் தங்க ளது சொந்த இடத்தில் மாடுகளை வளர்த்து,  மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு தர வேண்டு மென மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.