பாபநாசம், ஜூன் 23 -
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் சார்பில், அட்மா திட்டத்தின் கீழ் வயல் தினவிழா பயிற்சி நடைபெற்றது. அம்மா பேட்டை அருகே அருந்தவபுரத்தில் நடை பெற்ற பயிற்சியில் வேளாண் துணை இயக்குநர் (ஓய்வு) கலியமூர்த்தி தொழில்நுட்ப பயிற்சியளித்தார். குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டங்கள், மண் வள மேம்பாடு, உயிர் உரத்தின் முக்கியத்துவம், பயன் படுத்தும் முறை, வரப்பு பயிர்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கி னார். அம்மாபேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநர் மோகன் தலைமை வகித்தார். வேளாண் அலுவலர் பிரியா, விதைச் சான்று அலு வலர் பிரபு மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.