அறந்தாங்கி, ஆக.1-
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடை யார்கோவில் பகுதியிலிருந்து எண்.12 அரசுப் பேருந்து தினந்தோறும் நாகுடி, சுப்ரமணியபுரம் வழியாக அறந்தாங்கி செல்கிறது. இந்த பேருந்து ஆவுடை யார்கோவிலில் புறப்பட்டு கிடங்கிவயல், உதயமாணிக்கம், பட்டமடையான், கீழ்குடி, காசாவயல், இடையன் கொல்லை, முது வலர்குடி, தொண்டைமானேந்தல் வழி யாக நாகுடி சுப்பிரமணியபுரம் சென்றடையும்.
இப்பகுதி மாணவ, மாணவிகள் பள்ளி செல்வதற்கு, இந்த 12 ஆம் எண் பேருந்து மட்டும் இருக்கிறது. இதனால், மாணவர்கள் அதிகளவில் பேருந்தில் கூட்ட மாக செல்லக்கூடிய நிலை இருக்கிறது. குறிப்பாக நாகுடி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் சுப்பிரமணியபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் படிக்கும் மாண வர்களுக்கு இந்த பேருந்தை விட்டால், பள்ளிக்குச் செல்ல வேறு வசதி இல்லை. பெரும்பாலும் மாணவர்கள், படியில் தொங்கிக் கொண்டு செல்லும் நிலையே நிலவுகிறது. பேருந்தில் பயணம் செய்ய முடியாத மாணவர்கள், ஆட்டோவில் செல்கின்றனர்.
இந்நிலையில் நாகுடி பகுதியைச் சேர்ந்த மாணவி ஹர்ஷினி, சுப்புரமணிய புரத்தில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். செவ்வாயன்று வழக் கம்போல் எண்.12 பேருந்தில் ஏறி பய ணித்துள்ளார். அப்போது கூட்ட நெரிசல் தாங்காமல், பேருந்திலிருந்து தவறி கூக னூர் வளைவில் விழுந்து படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் மாண வியை மீட்டு சுப்ரமணியபுரம் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த னர். ஆனால், அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், மேல் சிகிச்சைக் காக அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளி நேரங்களில், கூடுதலாக பேருந்து களை இயக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தாலும், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொள்வது இல்லை. இதுவே இந்த விபத் துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.