districts

தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர், ஜூலை 22-  

    சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக, “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

    சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000 விருது தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்க மும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் முதல மைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார்.  

   2023-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான  தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே, சமூக  நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடைய வர்கள் விண்ணப்பிக்கலாம்.

   தங்களது விண்ணப்பம் சுயவிவரம், முழு முகவரி, தொலை பேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த  விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல்  வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியருக்கு  வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.9.2023. மேலும், விபரங் களுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலு வலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரி வித்தார்.