திருச்சிராப்பள்ளி, ஆக.2-
சாலை விபத்தில் படுகாயமடைந்த திருச்சியைச் சேர்ந்த போக்குவரத்துக் காவ லர் உயிரிழந்தார்.
திருச்சி மணிகண்டம் தீரன் நகரைச் சேர்ந்தவர் அகிலன் (20). இவர் திருச்சியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் மூன் றாம் ஆண்டு படித்து வருகிறார்.
செவ்வாய்க்கிழமை இரவு அகிலன் மற்றும் அவரது நண்பர் மதன் பிரசாத் (19) மோட்டார் சைக்கிளில், மன்னார்புரத்தில் இருந்து பி.அன்.டி. காலனி அருகில் வந்து கொண்டிருந்தனர். அப்போது தனது மோட் டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த ஹெல்மெட்டை எடுப்பதற்காக அகிலன் நடு ரோட்டில் வண்டியை நிறுத்தியுள்ளார். அச் சமயம், அந்தப் பகுதியில் போக்குவரத்து பணியில் இருந்த திருச்சி நவல்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்த போக்குவரத்து காவலர் ஸ்ரீதர் (45), சாலையில் விழுந்த ஹெல்மெட்டை எடுத்துக் கொடுத்துள்ளார்.
அப்போது மன்னார்புரத்தில் இருந்து வந்த கார், வேகமாக அகிலன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் காவலர் ஸ்ரீதர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கு நின்று கொண்டிருந்த அகிலன், மதன் பிரசாத் ஆகியோரும் காயமடைந்தனர். காயமடைந்த இவர்கள் திருச்சியில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், போக்குவரத்து காவலர் ஸ்ரீதர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரி வில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி புதனன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். இது குறித்து கண்டோன்மென்ட் தெற்கு போக்கு வரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக் குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.