பயிற்சி முகாம்
பாபநாசம், ஏப்.9 - 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன் னிட்டு, மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகு திக்குட்பட்ட, பாபநாசம் சட்டமன்ற தொகுதிக் குரிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளரை பதிவு செய்வது தொடர்பாக மண்டல அலுவலர் களுக்கு செய்முறை விளக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது. பாபநாசம் வட்ட அலு வலகத்தில் நடந்த முகா மில், மாவட்ட பிற்பட்ட நலத்துறை நில எடுப்பு தனி தாசில்தார் குமார், வாக்குப்பதிவு இயந்தி ரத்தில் சின்னங்கள் பதி வேற்றம் செய்வது குறித்து செய்முறை விளக்கம் காண்பித்தார். பாபநாசம் தாசில்தார் மணிகண்டன், வட்ட வழங்கல் அலுவலர் அரு ணகிரி, தேர்தல் துணை தாசில்தார் விவேகானந் தன் உட்பட அனைத்து மண்டல அலுவலர்கள், மண்டல உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
குமரப்பா பள்ளியில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
தஞ்சாவூர், ஏப்.9- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஜமாலியா பள்ளிவாசலில் இஃ ப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, பேரா வூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளியின் சார்பில் நடைபெற்றது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், குமரப்பா பள்ளி தாளாளருமான முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். குமரப்பா அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, குமரப்பா குழுமத்தின் கல்விப்புல இயக்குநர் அஸ்வின் கணபதி, அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள், பள்ளிவாசல் நிர்வாகி கள், இஸ்லாமியர்கள் திர ளாகக் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சிக்கு வந்தி ருந்தவர்களை பள்ளிவா சல் நிர்வாக ஜமாத் தலை வர் முத்தலிப் வரவேற்றார். ஜமாத் பொருளாளர் கே.கான்முகமது நன்றி கூறினார்.
தஞ்சையில் பறிமுதல் செய்த ரூ.30.12 லட்சம் விடுவிப்பு
தஞ்சாவூர், ஏப்.9 - தஞ்சாவூரில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.30,12, 310 மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு, திங்களன்று விடுவிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப் தெரி வித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தஞ்சா வூர் மக்களவைத் தொகுதியில் திங்கள்கிழமை கனரக வாகனங் களைப் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அதில் தேர்தல் நடத்தை விதிமீறல் காரணமாக, ரூ.1,02,590, 1,44,500, 1,00,000, 55,000, 1,00,000, 58,690, 1,00,000, 69,000, 75,490, 11,03,160, 62,060, 60,260, 4,48,480, 53,500, 77,080.4, 02,500 என ரூ.30,12,310 ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணையின்படி, தேர்தல் செலவின மேல்முறை யீட்டு குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அத்தொகை கள் உடனடியாக விடுவிக்கப்பட்டன” என்றார்.
துளசாபுரம் ஊராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
வேதாரண்யம், ஏப்.9- நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா துளசா புரம் ஊராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நாள்தோறும் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, குடிநீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது. திருத்துறைப்பூண்டியில் இருந்து பாமணி வழியாக நாள்தோ றும் இப்பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிதண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் பத்து நாட்களாக தண்ணீர் வரவில்லை. திருவாரூர் மாவட்டம் பாமணியி லிருந்து தண்ணீர் வழங்கி வந்த நிலையில், பாமணியில் உள்ள குடிநீர் குழாயை, குடிநீர் வடிகால் அதிகாரிகள் பூட்டி விட்டனர். இத னால் தண்ணீர் வராமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில், சாக்கை சட்ரஸ் அருகில் குடிதண்ணீர் கேட்டு காலிக் குடங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறி யலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கரியாபட்டினம் போலீசார் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பாமணியில் போட்டி ருக்கும் பூட்டு உடனடியாக அகற்றப்பட்டு, தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.
கடலை, எள் விதைப்பு பணியில் வேளாண் கல்லூரி மாணவிகள்
தஞ்சாவூர், ஏப்.9- தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டை முனைவர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவி கள், பட்டுக்கோட்டை பகுதியில் கிராமத் தங்கல் வேளாண் பணி அனுபவத் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர். இதனொரு பகுதியாக அணைக்காடு கிராமத் தில் உள்ள விவசாயி இசைக்கல் வேதநாய கத்தை சந்தித்த கல்லூரி மாணவிகள், அவர் தன் வயலில் பயிரிடும் நெல், கடலை மற்றும் எள்ளின் விதைப்பு முறைகள் மற்றும் சாகுபடி குறித்து கேட்டறிந்தனர். இசைக்கல் வேதநாயகம் கடந்த ஆண்டு தனது 6 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்து 15,120 கிலோ விளைச்சல் எடுத்தார். அது மட்டு மின்றி தஞ்சாவூர் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் (2022-2023) அதிக மகசூல் பெற்ற விவசாயி என்ற பட்டம் பெற்று ரூ.15,000 பரிசுத் தொகையும் பெற்றவர். அவர் வயலில் கடலை மற்றும் எள் விதைப்பு நடைபெற்றது. மாணவிகள் களத்தில் இறங்கி நுண்ணுயிர் கொண்டு, விதை சிகிச்சை செய்த கடலை விதைகளை, கடலை விதைக்கும் கருவி மூலம் தென்னை மரத்திற்கு இடையில் ஊடுபயி ராக விதைத்து கள அனுபவம் பெற்றனர். மேலும், எள் விதையை நெல் சாகுபடிக்கு பின்பு உழாமல் மண்ணில் இருக்கும் நீரை கொண்டு நேரடியாக தூவும் விதைப்பு முறையை கண்ட னர். அதன்பின், மாணவிகளும் வயலில் இறங்கி விதைத்தனர்.
ஏப்.19 இல் தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளிக்க வேண்டும் மயிலாடுதுறை ஆட்சியர் அறிவிப்பு
மயிலாடுதுறை, ஏப்.9- ஏப்.19 அன்று மக்க ளவை பொதுத் தேர்தல் நடை பெற உள்ளது. இத்தேர் தலில் 100 சதவீதம் வாக்களிக் கும் பொருட்டு, மயிலாடு துறை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடை கள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்களில் பணி புரியும் பணியாளர்கள் அனைவருக்கும் அன்றைய தினம் சம்பளத்துடன்கூடிய பொது விடுமுறை அளிக்கப் பட வேண்டும். அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவ னங்களின் மீது உரிய நட வடிக்கை எடுக்கப்படும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட அளவிலான தொழி லாளர் துறையின் மூலம் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் விடுமுறை அளிக்கப்படாதது தொ டர்பான புகார்களை தெரி விக்க மாவட்ட அளவிலான தொழிலாளர் உதவி ஆணை யர்(அமலாக்கம்) ம.குமார் (அலைபேசி எண் 94429 12527), மயிலாடுதுறை முதல் வட்டம், தொழிலாளர் உதவி ஆய்வாளர் கா.ஹேமா (அலைபேசி எண் 96263 92971), இரண்டாம் வட்டம், தொழிலாளர் உதவி ஆய்வா ளர் ம.கார்த்திகேயன் (அலைபேசி எண் 94892 57573), முத்திரை ஆய்வாளர் ராஜா, (அலைபேசி எண் 7418317907) மற்றும் சீர்காழி தொழிலாளர் உதவி ஆய்வா ளர் செ.இளஞ்செழியன் (அலைபேசி எண் 79043 80453) ஆகியோரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க லாம். மேற்காணும் தகவலை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளார்.
தரமற்ற குடிநீர் விற்பனை என புகார் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் திடீர் ஆய்வு
தஞ்சாவூர், ஏப்.9- தரமற்ற குடிநீர் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகா ரின் அடிப்படையில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தரமற்ற குடிநீர் விற்பனை செய்யப்படு வதாக மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சித்ரா ஆகியோ ருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து உயர் அலுவலர்கள் உத்தரவின்பேரில், பேராவூரணி உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் வேல்முருகன் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் வட்டாரங்க ளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது மினி வேன்களில், பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி களை வைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கிராமப் புறங்க ளில் விற்பனை செய்த 3 நிறுவனங்களின் வேன்களை தடுத்து நிறுத்தி, தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோ தனைக் கூடத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முரு கன் கூறுகையில், தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கூடத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளது. அதன் முடிவுகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப் படும். மேலும், உணவகங்கள், கடைகளில் ஆய்வு மேற்கொள் ளப்பட்டு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 10 கிலோ பிளாஸ்டிக் கேரி பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அந்தக் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல், பால் விற்பனை செய்தவரிடம் ஆய்வு மேற் கொள்ளப்பட்டு தரம் குறைந்த 25 லிட்டர் பாலை பறிமுதல் செய்து கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
தேர்தல் நடத்தை விதிமீறல்: புதுகையில் 6 வழக்குகள் பதிவு
புதுக்கோட்டை, ஏப்.9 - தேர்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்து இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. 18 பறக்கும் படை கள், 18 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 6 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்தி லுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சுழற்சி அடிப்ப டையில் பணியில் உள்ளனர். இந்நிலையில், திங்கள்கிழமை வரையிலான தேர்தல் விதிமீறல் நடவடிக்கைகள் குறித்து மாவட்டத் தேர்தல் அலு வலரும் ஆட்சியருமான ஐ.சா.மெர்சி ரம்யா கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை ரூ.4.78 கோடி மதிப்பில் தங்கம், வெள்ளி நகைகள் உள்ளிட்ட பொருட் களும், ரூ.53 லட்சம் ரொக்கம், 827 எண்ணிக்கையில் மது பாட்டில்களும், 3.8 கிலோ போதைப் பொருட்களும் கைப் பற்றப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், சி-விஜில் செயலி மூலம் 12 புகார்கள் பெறப் பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 20 புகார்கள் வரப்பெற்று, அவற்றின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெறும்” என்றார்.
திருமண மண்டபத்தை பேரூராட்சி நிர்வாகமே நடத்த கோரிக்கை
தஞ்சாவூர், ஏப்.9 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி திரு மண மண்டபத்தை தனியாருக்கு ஏலம் விடாமல் பேரூராட்சி நிர்வாகமே நேரடியாக நடத்த வேண்டும் என 11 ஆவது வார்டு பேரூராட்சி உறுப்பினர் மகாலட்சுமி சதீஷ்குமார் தஞ்சை ஆட்சியர், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோ ருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள மனுவில், “பேராவூ ரணி நகரின் மையப்பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய திருமண மண்டபம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, கடந்த ஆண்டு ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது. இந்த மண்டபத்தை தனியாருக்கு கடந்த பல ஆண்டு களாக மிக குறைந்த வாடகைக்கு ஏலம் விட்டு, ஏலம் எடுத்தவர்கள் திருமணம், காதணி விழா, மொய் விருந்து உள்ளிட்ட வைபவங்களுக்கு அதிக வாடகைக்கு விடு கின்றனர். கடந்த 2023-24 ஆம் ஆண்டிற்கு ரூ.6.8 லட்சத்திற்கு மண்டபம் ஏலத்துக்கு விடப்பட்டு, இந்த நிதியாண்டு 2024 மார்ச் 31 வரை, ஏலக் குத்தகைத் தொகை, ஏலம் எடுத்த தனிநபரால் பேரூராட்சிக்கு செலுத்தப்படாமல் உள்ளது. தனியாருக்கு குறைந்த ஏலத்துக்கு விடப்பட்டு, இது வரை குத்தகையும் செலுத்தாத நிலை உள்ளதால், பொது மக்கள் பயன்பெறும் வகையில், பேரூராட்சி நிர்வாகமே நேரடியாக திருமணம், காதணி போன்ற நிகழ்ச்சிகளுக்கு ரூ.10 ஆயிரம் நிர்ணயம் செய்து மிகக் குறைந்த வாட கைக்கு விடலாம். இதனால் ஆண்டிற்கு குறைந்தது 200 நிகழ்ச்சிகள் நடத்தினால்கூட பேரூராட்சிக்கு நிர்வாகத் திற்கு குறைந்தபட்சம் ரூ.20 லட்சம் வருமானம் கிடைக்கும். சாதாரண ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த வாடகை யில் மண்டபம் கிடைப்பது உதவியாகவும் இருக்கும் என்பதால், நடப்பாண்டிலிருந்து பேரூராட்சி நிர்வாகமே நேரடியாக மண்டபத்தை ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை பிடிபடுமா?
மயிலாடுதுறை, ஏப்.9 - மயிலாடுதுறை நகரப் பகுதியான கூறைநாடு, அதைத் தொடர்ந்து ஆரோக்கியநாதபுரம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வந்தது. இந்நிலையில் வனத்துறை செய்திக்குறிப்பில், “சிறுத்தையின் நட மாட்டமானது ஆறு மற்றும் ஓடையோரங் களில் குறிப்பாக மஞ்சளாறு, மகிமலை யாறு மற்றும் பழைய காவேரி ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக கண்கா ணிக்கப்பட்டு வருகிறது. குத்தாலம் ஒன்றியம், கோமல் மற்றும் காஞ்சிவாய் பகுதியில் சிறுத் தையை நேரில் பார்த்ததாக பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று வனத்துறை யினர் அப்பகுதி மக்களிடம் விசா ரணை நடத்தினர். விசாரணையில், எந்தவொரு கால டித்தடம் அல்லது சிறுத்தையின் எச்சம் போன்ற அடையாளங்கள் களப் பணியா ளர்களுக்கு தென்படவில்லை. வனத்து றையினர் கேமரா டிராப் மற்றும் கள ஆய்வு மூலம் நண்டலாறு பகுதியில் தேடுதல் பணியை மேற்கொண்டு வந்த னர். நண்டலாறு ஆற்று பகுதியை ஒட்டி, சிறுத்தை நடமாடக் கூடிய முக்கிய இடங்களில் நான்கு கூண்டுகள் வைக்கப் பட்டன. அதேநேரத்தில், ஏற்கனவே சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட காவிரி ஆற்றின் சிற்றோடைகளில் சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. சிறுத்தையின் நடமாட்டம் முன்னதாக தென்பட்ட இடங்கள் மற்றும் சாத்தியக் கூறுள்ள பகுதிகளில் 19 கேமரா டிராப்கள் பொருத்தப்பட்டன. காவிரி ரயில்வே மேம்பாலத்தின் கீழே ஒரு கூண்டும், மஞ்சளாறு ஆற்றங்கரை யோரம் இரண்டு கூண்டுகளும் வைக்கப் பட்டுள்ளன. மேலும் கோயம்புத்தூரில் இருந்து WWF-India நிபுணர் குழு, சுமார் 30-க்கும் கேமரா டிராப்களுடன் களத்தில் பணியை தொடங்கியது. ஏற்கனவே உள்ள களப் பணியாளர்களுடன் இவர் கள் இணைந்து விஞ்ஞான பூர்வமாக சிறுத்தையின் நடமாட்டத்தை கண்ட றிய கூட்டாக களத்தில் செயல்பட்டு வரு கின்றனர். சிறுத்தை நடமாட்டம் மற்றும் அதன் பயன்பாட்டுப் பகுதியின் அமைப்பினை அறிய, காலை டிரோன் கேமராவும், இரவு நேரங்களில் தெர்மல் டிரோன் கேமராக்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில், உள்ளூர் மக்களுடன் இணைந்து காவல்துறை, வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகள் மற்றும் சாத்தியக் கூறு அடங்கிய பகுதிகளின் ரோந்து பணி யில் கள உபகரணங்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நண்டலாற்று பகுதிகளில் கூண்டு கள் அமைத்தும் தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட எல்லைப்பகுதிகளில் சிறுத்தை சென்றுள்ளதா எனவும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பொதுமக்களி டையே சிறுத்தை நடமாட்டத்தால் அச்சம் நிலவி வருகிறது. தேர்தலுக்கு உள்ளாவது சிறுத்தை பிடிக்கப்பட்டு விடுமா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.