தஞ்சாவூர், ஆக.26-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ரெட்டவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், கரும்பு விவசாயி களுக்கு வழங்கப்பட்ட கடன் நிவாரணத் தொகையில், பெருமளவு முறைகேடு நடந்தது.
இதையடுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர்ச்சி யாக பல்வேறு கட்டப் போராட்டங் களை நடத்தி வந்தது. இதன் எதிரொ லியாக, கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை படிப்படி யாக வழங்க அரசு மற்றும் கூட்டுறவுத்துறை ஏற்பாடு செய்தது. இந்நிலையில், மேலமணக்காடு பெண் விவசாயி ஒருவருக்கு நிவார ணத் தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து, பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயி களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது.
அப்போது, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கப் பொறுப்பாளர்கள் உடனி ருந்தனர்.