தஞ்சாவூர், பிப்.27- தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் அருள்மொழிப்பேட்டை, மாரி யம்மன் கோவில் ஆகிய இரு இடங்களில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கிளை துவக்கம் மற்றும் கொடியேற்று விழா நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு கே.சின்னையன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், தமிழ் நாடு அடிமனை, குத்தகை விவசாயிகள் பாது காப்பு சங்க மாவட்டச் செயலாளர் எம்.ராம் ஆகியோர் கொடியேற்றி சிறப்புரையாற்றி னர். இதில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பிராஜன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலை வர் பிரதீப் ராஜ்குமார், தமிழ்நாடு விவசாயி கள் சங்க ஒன்றியச் செயலாளர் கே.முனி யாண்டி, ஒன்றியத் தலைவர் எஸ்.வி.கருப் பையன், ஒன்றிய பொருளாளர் வி.மயில்வாக னன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இரு இடங்களிலும் 200-க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அனைத்து சமய நிலங்களில் குடியிருப்ப வர்களுக்கு நெருக்கடி தரக்கூடாது. அவர்களிடம் உரிய தொகையை பெற்றுக் கொண்டு பட்டா வழங்க வேண்டும். உயர்த்தப் பட்ட கட்டணங்களை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.