தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகா: நாகுடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
அறந்தாங்கி, அக்.14 - காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், அதனை பெற்றுத்தர மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்டம் நாகுடியில் மாவட்ட கல்லணைக் கால்வாய் கடைமடை பகுதி பாசனதாரர்கள் சங்க மாவட்டத் தலைவர் கொக்கு மடை ரமேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அறந்தாங்கி அருகே கல்லணைக் கால்வாய் கடைமடை பகுதியில் சுமார் 27 ஆயிரம் ஹெக்டேர் பரப்ப ளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்ற னர். காவிரியில் தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை யில் விவசாயிகள் பணிகளை மேற்கொண்டனர். ஆனால் தற்போது போதிய மழை இல்லாததாலும், காவிரியில் தண்ணீர் திறந்து விடாததாலும் நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. எனவே காவிரியில் தண்ணீர் திறத்து விட வேண்டுமென வலியுறுத்தினர்.
பேரிடர் மீட்பு ஒத்திகை
பொன்னமராவதி, அக்.14 - புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள மேலைச் சிவபுரியில் பேரிடர் அபாய குறைப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேரிடர் மேலாண்மை மீட்பு ஒத்திகை பயிற்சி செய்யப்பட்டது. பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான வீரர்கள், பேரிடர் மேலாண்மை பயிற்சி, இயற்கை இடர்ப் பாடுகள், பேரிடர் காலங்களில் பொதுமக்கள் சிக்கித் தவித்தால் எவ்வாறு மீட்பது என்பது குறித்த ஒத்திகையை செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கலைத் திருவிழா முன்திட்டமிடல் கூட்டம்
அறந்தாங்கி, அக்.14 - புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்தில் கலைத் திருவிழா முன் திட்டமிடல் கூட்டம் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் தலைமையில் தொடங்கியது. மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சு.சிவயோகம் வரவேற்றார். பொன்னகரம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் இளங்கோவன் உரையாற்றினார். இந்த ஆண்டு கலைத் திருவிழாவில், எல்லோருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் விழாவை செயல்படுத்த வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது. ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன், அங்கையற் கண்ணி, இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் மற்றும் அனைத்து நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கலைத் திருவிழா உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை
புதுக்கோட்டை, அக்.13- புதுக்கோட்டை அருகே மாணவிக்கு பாலியல் தொந்த ரவு கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாளவிடுதியைச் சேர்ந்தவர் சீனியப்பா(58). இவர் துவார் அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2021 நவம்பர் மாதம், 6 ஆம் வகுப்பு படித்து வந்த மாண விக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் நன்ன டத்தை அலுவலர் சசி, ஆலங்குடி மகளிர் காவல் நிலையத் தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆசிரியர் சீனியப்பாவைக் கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, குற்றவாளிக்கு வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கினார். அதில், 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையுடன் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப் பட்டது.
மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மனிதச் சங்கிலி போராட்டம்
தஞ்சாவூர், அக்.14 - அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் விசாகா குழுக்களை அமைக்க வேண்டுமென வலியுறுத்தி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவர்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட னர். தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், பாலியல் வன்முறை, கூடுதல் வேலை நேரம், உழைப்பு சுரண்டல், பகடிவதை உள்ளிட்ட காரணங்களால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட மருத்துவர் சுகிர்தாவுக்கு நீதி வழங்க வேண்டும். குற்றவாளிகள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மருத்துவக் கல்லூரிக ளிலும் விசாகா குழுக்களை அமைக்க வேண்டும். மருத்துவ மாணவர்கள் நலனுக்காக மாநில மற்றும் கல்லூரி அளவில் மருத்துவ மாணவர் நல வாரியங் களை அமைக்க வேண்டும். இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு 8 மணி நேரத் திற்கு மேல் பணி வழங்கக் கூடாது. மாணவர்களுக்கு தேசிய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளுக்கு புறம் பான, அதில் குறிப்பிடப்படாத வேலைகளை வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.
மின்னல் தாக்கி பசுமாடு பலி
வேதாரண்யம், அக்.14 - நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த காரியாபட்டினம், வடமலை, மணக்காடு சுற்றுவட்டாரப் பகுதியில் வெள்ளியன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதில், வடமழை மணக்காடு பகுதியைச் சேர்ந்த சித்ரா என்பவரது வீட்டில் கட்டியிருந்த பசுமாடு மின்னல் தாக்கி பலியானது.
அக்.19 இல் லியோ திரைப்படம் வெளியீடு
விதிமீறல் குறித்து புகார் அளிக்கலாம்
மயிலாடுதுறை, அக்.14 - மயிலாடுதுறையில் அக்டோபர் 19 அன்று வெளிவரும் “லியோ” (LEO) என்ற புதிய திரைப்படத்தை அக்.19, 20, 21, 22, 23, 24 ஆகிய நாட்களில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் நடத்திக் கொள்ள, அரசு அனுமதி அளித்து ஆணையிட்டுள்ளது. மேற்படி சிறப்பு காட்சிகள் நடைபெறும் திரை யரங்குகளில், அதிக கட்டணம் வசூல் செய்தல் போன்ற விதிமீறல்கள் இருப்பின், பொதுமக்கள் கீழ்க்கண்ட தொலை பேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம். மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலர்: 04364-222033, மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர்: 94981 00907, மயிலாடுதுறை காவல் ஆய்வாளர்: 9442003309, சீர்காழி வருவாய் கோட்ட அலுவலர்: 04364 - 270222, சீர்காழி துணை காவல் கண்காணிப்பாளர்: 9498100908, சீர்காழி காவல் ஆய்வாளர்: 9498100926 என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி தெரிவித்துள்ளார்.
கொள்ளிடம் மணல் குவாரிகளில் அமலாக்கத் துறையினர் சோதனை
மயிலாடுதுறை, அக்.14 - கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்ட மணல் குவாரிகள், விதிகளை மீறி அதிகளவில் மணல் அள்ளியது குறித்து அமலாக்கத்து றையினர் சோதனை செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், கொள்ளிடம் ஆற்றில் மாதிரவே ளூர், பாலுரான்படுகை, பட்டியமேடு ஆகிய இடங்களில் கடந்த இரண்டு ஆண்டு களுக்கு மேலாக அரசின் மணல் குவாரி செயல்பட்டது. இங்கு அள்ளப்படும் மணல் குன்னம் என்ற இடத்தில் உள்ள யாடில் குவிக் கப்பட்டு அங்கிருந்து லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. லாரிகளில் ஏற்றப்படும் மணலை ஆன்-லைன் மூலம் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறையை மீறி, நேரடியாக பணம் பெற்றுக் கொண்டு லாரிகளில் மணலை அனுப்பி வைத்தனர். இது மட்டு மின்றி, ஆற்றில் பல அடி ஆழத்திற்கு மணல் அள்ளி விற்பனை செய்து வந்தனர். சமீபத்தில் தமிழ்நாட்டில் சட்டவிரோத மணல் குவாரிகள் குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்த நிலை யில், சனிக்கிழமை மயிலாடுதுறை மாவட்டத் தில் மணல் குவாரிகள் செயல்பட்ட மூன்று இடங்களில் 30-க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட னர். துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் நடைபெற்று வரும் சோதனையில், மணல் எடுக்கப்பட்ட இடம், அதன் பரப்பளவு-ஆழம் ஆகியவை குறித்தும் அளவீடு செய்தனர். இந்த ஆய்வின் முடிவில் முறைகேடாக எத்தனை யூனிட் மணல் விற்பனை செய்யப் பட்டது என்பது தெரிய வரும் எனக் கூறப்படு கிறது.
இலுப்பூர்: சாலை சீரமைக்கப்படுமா?
மயிலாடுதுறை, அக்.14 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், இலுப்பூர் ஊராட்சி யில் சாலை வசதி செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிளைச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இலுப்பூர் தபால் நிலையம் எதிரே நடைபெற்ற மறியலுக்கு கட்சி யின் ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சிம்சன், மாவட்டக் குழு, ஒன்றிய குழு உறுப்பினர்கள், இலுப்பூர் தெற்குத் தெரு கிராம மக்கள் பங்கேற்றனர். இலுப்பூர் ஊராட்சியில் உள்ள தெற்கு தெரு சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சேதம் அடைந்துள்ளது. இதை உடனடியாக சீர்செய்து தார்ச் சாலையாக மாற்றி தர வேண்டும். பள்ளிவாசல் தெருவில் உள்ள சாலையை சீர்படுத்த வேண்டும். நடுத்தெருவில் உள்ள தார்ச்சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இஸ்லாமியர்கள் வசிக்கும் வடக்குத் தெரு சாலையை செப்பனிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன. மறியல் குறித்து தகவலறிந்து வந்த தரங்கம்பாடி வட்டாட்சியர் சர வணன், பொறையார் காவல் ஆய்வாளர் சிங்காரவேல் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதில், ஒரு மாதத்திற்குள் கோரிக் கைகளை நிறைவேற்றி தருவதாக, துணை வட்டார வளர்ச்சி அலுவ லர் ஒப்புதல் அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
அரசு விதிமுறைகளைப் பின்பற்றி பட்டாசு கடை அமைக்க அறிவுறுத்தல்
கும்பகோணம், அக்.14- தீபாவளியை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தீய ணைப்புத் துறை அலுவலகத்தில் பட்டாசு விற்பனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தீயணைப்புத் துறை அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், மாறன் (திருவிடைமருதூர்), செல்வம் (பாபநாசம்), பட்டாசு விற்பனை யாளர் தலைவர் அசோகன் மற்றும் விற்பனையாளர்கள் தயாரிப்பா ளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் பேசுகையில், “பட்டாசு கடை கள் வைக்க 30 விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவற்றை பின்பற்றினால் மட்டுமே தடையில்லா சான்று வழங்க வேண்டும் என்று தீயணைப்புத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். உரிமம் பெற்ற கட்டிடத்தை தவிர வேறு இடங்களில் பட்டாசு இருப்பு வைக்கக் கூடாது. அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பட்டாசு இருப்பு வைக்கவும் கூடாது. இதை மீறும் பட்டாசு விற்பனையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்” என அறிவுறுத்தினார்.
ரேசன் அரிசி கடத்தல்: 4 பேர் கைது
தஞ்சாவூர், அக்.14 - தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக உணவுப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினருக்கு புகார் வந்தது. இதன்பேரில் காவல் ஆய்வாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கீழ வாசல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, கீழவாசல் மீன் சந்தை அருகே வந்த சரக்கு ஆட்டோவை, காவல் பிரிவி னர் நிறுத்தி சோதனையிட்டனர். அதில், தலா 50 கிலோ எடை கொண்ட மொத்தம் 36 மூட்டைகளில் 1,800 கிலோ ரேசன் அரிசியை கடத்திச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து சரக்கு ஆட்டோவில் வந்த தஞ்சாவூர்-நாகை முதன்மை சாலை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த மணிகண்டன் (34), புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டத்துக்குட்பட்ட தென் மலையூ ரைச் சேர்ந்த சரக்கு ஆட்டோ ஓட்டுநர் கோவிந்தசாமி (45), கூலித் தொழி லாளர்களான கறம்பக்குடி அருகே உள்ள பொன்னர் விடுதியை சேர்ந்த சபரீஷ் கண்ணன் (22), மலையூரை சேர்ந்த முருகேசன் (34) ஆகி யோரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தஞ்சாவூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, மீன் பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக கடத்திச் செல்வது தெரிய வந்தது.
பருவமழை முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்
தஞ்சாவூர், அக்.14 - வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் த.சுகுமார் தலைமையில், அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை உருவாக்கி, அதில் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களுடன் சுழற்சி முறையில் பணியாளர்களை நியமிக்க வேண்டும். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப் பட்டது.
ஆட்டோ சங்க கிளை துவக்கம்
திருச்சிராப்பள்ளி, அக்.14 - திருச்சி புறநகர் மாவட்டம் வாளாடி பேருந்து நிறுத்தம் அருகில் ஆட்டோ தொழிலா ளர் சங்கம் (சிஐடியு) புதிய கிளை துவக்க விழா வெள்ளியன்று நடந்தது. விழாவிற்கு இளங்கோவன் தலைமை வகித்தார். சங்க கொடியை சிஐடியு மாவட்ட தலைவர் சம்பத் ஏற்றினார். சங்க பெயர் பலகையை மாவட்டச் செயலாளர் சிவராஜ் திறந்து வைத்தார். இதில், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சந்திரசேகர், ஆட்டோ சங்க மாவட்டக் குழு உறுப்பினர் கார்த்திக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா ளர் பாலு ஆகியோர் பேசினர். வாளாடி ஊராட்சி மன்ற கவுன்சிலர், ஆட்டோ நிலையம், லோடு ஆட்டோ நிலைய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இவ்விழா வில் 22 பேர் சிஐடியு சங்கத்தில் இணைந்தனர்.
ரசாயனம் கலந்த தண்ணீரால் கருகிய பயிர்கள்
நடவடிக்கை எடுக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
கரூர், அக்.14 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு கூட்டம் குளித்தலை ஒன்றி யக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.கந்தசாமி தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் கே.முகமதுஅலி பேசினார். மாவட்டச் செயலாளர் கே.சக்தி வேல், மாவட்ட பொருளாளர் கே.சுப்பிர மணியம் மற்றும் மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றி யத்திற்குட்பட்ட மாயனூர், கீழமாயனூர், ரெங்கநாதபுரம், கட்டளை, மணவாசி பகுதி களில் அமராவதி - கும்பகுழி வடிகால் வாய்க்காலில் ரசாயனம் கலந்த தண்ணீர் வருகிறது. இதனால், விவசாயிகள் நடவு செய்த 100 ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் கருகி விட்டன. இது விவசாயிகளுக்கு பெரும் மன வேதனையையும் பொருளாதார இழப்பை யும் ஏற்படுத்தியுள்ளது. வேளாண்மை துறை, நீர்வள ஆதாரத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம், ஆய்வு செய்து விவசாய நிலத்தை பாதுகாப்பதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்த, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
கொப்பரை தேங்காய் கொள்முதல் நவ.26 வரை நீட்டிப்பு விற்பனைக் குழு செயலாளர் தகவல்
தஞ்சாவூர், அக்.14- தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நவ.26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் விற்பனைக் குழுச் செயலாளர் மா.சரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, கும்பகோணம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 6.200 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 1.4.2023 முதல் 30.9.2023 வரை கொள்முதல் பணிகள் நடை பெற்றன. இந்த கால கட்டத்தில் 6,199.250 டன் கொள்முதல் இலக்கு நிறைவு செய்யப்பட்டு, 3,998 விவசாயிகள் பய னடைந்துள்ளனர். இந்நிலையில், தென்னை விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு. பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சா வூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கூடுதலாக தலா 1,000 டன், கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 900 டன் என கொள்முதல் இலக்கு உயர்த்தப் பட்டுள்ளது. இதன்படி, இந்த இடங்களில் நவ.26 அன்று கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படும். தென்னை விவசா யிகள் தங்களது சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை அளித்து, முன்பதிவு செய்து, கொப்பரை தேங்காய்களை விற்று பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு விற்பனைக் கூட கண்கா ணிப்பாளர்களை பட்டுக்கோட்டை 9677870366, கும்பகோ ணம் 99409 13140, தஞ்சாவூர் 63802 89219, ஒரத்தநாடு மேற்பார்வையாளர் 86670 06488 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.