புதுக்கோட்டை/தஞ்சாவூர், மே 26-
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மே 31-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணியள வில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற உள்ளது.
இந்தக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவ லர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின், விவசாயம் சம்மந் தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார் கள். புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூரில் மே 30 இல் கூட்டம்
இதுகுறித்து ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மே 30-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை பத்து மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில் நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கம் அளிக்கப்பட உள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவ சாய சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், கூட்டு றவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும்.
பதிவுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை 30-ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற வேண்டும். விவ சாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் விவசாயம் சார்ந்த கருத்துக்களை கோரிக்கைகளாக தெரிவித்துப் பயன்பெறலாம். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டு உள்ளது.