districts

img

ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரத்தில் முருங்கையை அழிக்கும் விவசாயிகள்

அரியலூர், செப்.14- அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர் ஜெயங்கொண்டம் பகுதிகளில் விவசாயிகள் முருங்கையை அதிகள வில் சாகுபடி செய்து வரு கின்றனர் உற்பத்தி செய்யப் படும் முருங்கையைக் கும்ப கோணம், தஞ்சாவூர், திருச்சி ராப்பள்ளி சென்னை உள்  ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்கின்றனர். தற்போது முருங் கைக்குக் கட்டுப்படியான விலை கிடைக்காததால் விவ சாயிகள் அழித்து வருகின்ற னர். அரியலூர் மாவட்டம் வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் தனக்குச் சொந்தமான இரண்டு  ஏக்கர் நிலத்தில் முருங்கை சாகுபடி செய்திருந்தார். முருங்கை பூவும் பிஞ்சுமாய் காய்த்து வருகிறது. கூலி  ஆட்களைக் கொண்டு பறிக் கப்பட்ட முருங்கைக்காயை விற்பனைக்காகக் கும்ப கோணம் சந்தைக்கு எடுத்துச் சென்றுள்ளார் விவசாயி குமார். அங்குக் கடந்த சில நாட்களாக இரண்டு ரூபாய் முதல் மூன்று ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது. விலை அதிகரிக்கும் என்ற  நம்பிக்கையில் தொடர்ந்து  பறிக்கப்பட்ட முருங்கைக் காயைச் சந்தைக்குக் கொண்டு  சென்ற விவசாயி குமாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முருங்கைக்காயைக் கூட வாங்குவதற்கு ஆள் இல் லாத நிலையில், விரக்தி அடைந்த விவசாயி குமார், பூவும் பிஞ்சுமாய் காயுமாக இருந்த முருங்கையை டிராக்டர் கொண்டு அழித்து மறு உழவு செய்துவிட்டார். இதுகுறித்து அவரிடம்  பேசியபோது, “முருங் கைக்கு ஆதார விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் எனக் கையெடுத்துக் கும்பிட்டார்”. வானதிரையன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவ சாயி மணியிடம் பேசியபோது, “எங்கள் பகுதியில் நூறு ஏக்  கருக்கு மேல் முருங்கை விவ சாயம் நடைபெறுகிறது.கட்  டுப்படியான விலை இல்லாத தால் இரண்டு ஏக்கருக்கு மேல்  பயிரிட்டிருந்த முருங்கை யை டிராக்டர் வைத்கு உழுது அழித்து விட்டோம். அழிப்ப தற்கும் அதிகம் செலவாகி றது. ஏக்கருக்கு 70 ஆயிரம்  செலவு செய்து பூவும் காயுமா இருக்கும் முருங்கையை அழிப்பது வேதனையாக உள்ளது. “மேலும் அவர்  கூறுகையில், ஒரு முருங் கைக்காய் கடையில் நான்கு  ரூபாய்க்கு விற்கின்றனர். எங்களிடம் ஒரு ரூபாய்க்குக் கேட்கின்றனர். ஆவின் பால் உள்ளிட்டவைகளுக்கு ஆதார  விலை உள்ளது போல்  அனைத்து காய்கறிகளுக் கும் ஆதார விலை நிர்ண யிக்க வேண்டும். மதிய உண வுத்திட்டத்திற்கு முருங்கைக்  காயைப் பயன்படுத்துவது குறித்துக் கூட அரசு யோசிக்  கலாம்” என்றார். விவசாயி குணசேகரனி டம் பேசியபோது, “ தழு தாழை மேடு உட்பட்ட பகுதி களில் சுமார் 100 ஏக்கர் முருங்கை விவசாயம் செய்து வருகிறோம்.ஏக்கர் ஒன்றுக்கு 65 ஆயிரம் முதல்  70 ஆயிரம் வரை செலவாகி றது. வருடா வருடம் நல்ல பலன் கிடைத்தது. தற்போது முருங்கையை வாங்க ஒரு  வியாபாரி கூட வரவில்லை பத்து ரூபாய்க்கு விற்ற முருங்கையை தற் போது ஒரு ரூபாய்க்குக் கூட வாங்க யாரும் முன்வரவில்லை. மூன்று டன் முருங்கை என் னுடைய நிலத்தில் உள்ளது இதற்காக வங்கியில் வாங் கிய கடனைச் செலுத்த முடி யாமல் சிரமப்பட்டு வரு கிறேன். எனது நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஆட்டை  விற்று வாழ்க்கை நடத்தலாம் கண்கலங்காதீர்கள் என எனது மனைவி ஆறுதல் கூறு கிறார்” என்றார். நமது நிருபர்