தஞ்சாவூர், செப்.9- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பாசனக் குளத்தை ஆக்கிரமித்து தென்னந்தோப்பாகவும், வயலாகவும் மாற்றி யதால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. குளத்து ஆக்கிர மிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் சார்பாக, கழனிவாசல் கிராமத்தை சேர்ந்த பார்த்திபன், ஊமத்தநாடு கிராமத்தை சேர்ந்த அன்பழ கன் ஆகியோர் தஞ்சை ஆட்சியருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்ப தாவது: தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ஊமத்தநாடு ஊராட்சியில் பெரிய கத்திக்கோட்டை வருவாய் கிராமத்தில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான சுமார் 5.805 ஏக்கர் பரப்பளவு கொண்ட பள்ளவீரன் பாசன குளம் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங் கள், இந்த குளம் மூலம் பாசனவசதி பெற்று வந்தன. இந்நிலையில் சிலர் குளத்தை ஆக்கி ரமித்து தென்னந்தோப்பாகவும், வயலாக வும் மாற்றி விட்டனர். இதனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் பலமுறை முறை யிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. குளத்தை ஆய்வு செய்து ஆக்கிர மிப்பை அகற்றி விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.