பாபநாசம், ஜூலை 17-
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வேளாண் உதவி இயக்குநர்(பொ) மோகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், மானி யத்தில் இடுபொருட்களைப் பெற விரும்பும் விவசாயிகள், குறுவை தொகுப்புத் திட்டத் திற்கான ஆவணங்கள் கணினி சிட்டா, சிட்டா அடங்கல், வங்கி கணக்குப் புத்தக நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் அலைபேசி எண்ணுடன் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலரைத் தொடர்புக் கொள்ளலாம்.
குறுவை நெல் சாகுபடியை ஊக்கு விக்கும் பொருட்டு குறுவைச் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு ஒரு ஏக்க ருக்கு ரூ.2,466 மதிப்புள்ள 45 கிலோ யூரியா, 50 கிலோ டிஏபி, 25 கிலோ பொட்டாஷ் உரங் கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
ஆடிப்பட்டத்தில் நிலக்கடலை சாகு படி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்க ருக்குத் தேவையான விதை 50 சதவீத மானியத்திலும், சிறு தானிய சாகு படிக்கு சிறுதானிய விதை 4 கிலோ சூடோ மோனாஸ் மற்றும் திரவ உயிர் உரங்கள் ஒரு ஏக்கருக்கு தேவையான மதிப்பில் 50 சதவீத மானியமும், மேலும் உளுந்து சாகு படி செய்வதற்கு ஏக்கருக்கு 8 கிலோ உளுந்து விதையும், திரவ உயிர் உரங்கள், சூடோமோனாஸ் மற்றும் தெளிப்பிற்கான 50 சதவீத மானியமும் குறுவைத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளன.
இத்திட்டத்தில் பயனடைய அந்தந்தப் பகுதி விவசாயிகள் நேரடியாகவோ, உழ வன் செயலி மூலமோ முன்பதிவு செய்திட லாம். அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலரை அணுகி முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.