திருநெல்வேலி அக். 5- நெல்லை மாவட்டம் கருங்காடு பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் வாழை பயிர்கள் நடப்பட்டுள்ளன. வாழைப்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியுள்ளன. இது குறித்து அந்த பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கும், வனத்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகமும் வனத்துறையினரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் சேதமான வாழை பயிர்களால் கடுமையான நஷ்டம் ஏற்பட்டதாகவும் விவசாயிகள் வேதனையோடு தெரிவித்தனர்.