districts

img

ஆறுகளில் கருவேல மரங்கள், நாணல்கள் ஆக்கிரமிப்பு

பாபநாசம், ஜன.9 - தஞ்சாவூர் மாவட்டம் குட முருட்டி, வெட்டாறு, கொள்ளி டம் உள்ளிட்ட ஆறுகளில் நெய்வேலி காட்டாமணக்கு, சீமை கருவேலம், நாணல்கள் அடர்ந்து வளர்ந்து நீரின் போக்கைத் தடுக்கின்றன. இத னால் வாய்க்கால் பாசனம் அரிதாகிவிட்டது. சீமை கரு வேலம் சுற்றுச்சூழலுக்கு கேடு  மட்டுமல்ல, நிலத்தடி நீரையும் உறிஞ்சக் கூடியது.  பாபநாசத்தை அடுத்த  திருக்கருக்காவூர் வெட்டாற் றில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு  நாணல்கள், சீமை கருவேல மரங்கள் மண்டியுள்ளன. ஆங் காங்கே மேடிட்டு நீரின் போக் கைத் தடுக்கின்றன. இதனால் ஆற்றில் நீர் செல்லும் பாதை குறுகி வருகிறது. கரைகளில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்திருக்கிறது. எனவே அரசு இதில் உரிய கவனம் செலுத்தி, இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.  இதுகுறித்து அப்பகுதி விவ சாயிகள் கூறுகையில், “பல கிலோ மீட்டர் தூரத்திற்கு சீமை  கருவேலம், நெய்வேலி காட்டா மணக்கு மண்டி கிடப்பதால், நீரின் போக்கு தடைபடுகிறது.  வெட்டாற்றைத் தூர்வாரி 20 வருடத்திற்கு மேல் இருக்கும்” என்றனர்.