மயிலாடுதுறை, ஆக.14-
பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முரு கனிடம் தமிழ்நாடு அடி மனை பயனாளிகள் குத் தகை விவசாயிகள் பாது காப்பு சங்கம் சார்பில் பல் வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மனு அளிக்கும் இயக்கம் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவி லில் திங்களன்று நடைபெற் றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் த.ராயர் தலைமை வகித்தார். மாநில பொருளா ளர் எஸ்.துரைராஜ், மாவட் டச் செயலாளர் ஏ.ஆர்.விஜய் ஆகியோர் சட்டமன்ற உறுப் பினரிடம் கோரிக்கை மனுக் களை அளித்தனர். சங்கத் தின் மாவட்ட பொருளாளர் அ.இராமலிங்கம் (இயற்கை விவசாயி), மாவட்டத் துணை செயலாளர் சி.மேகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.
அம்மனுவில், “புதிய வாடகை நிர்ணயிக்க தலை மைச் செயலாளர் தலைமை யில் அமைக்கப்பட்ட உயர் மட்டக் குழுவின் பரிந்துரை கள் வெளிவரும் வரை, உயர்த்தப்பட்ட வாடகையை செலுத்த பயனாளிகளை கட்டாயப்படுத்தக் கூடாது. அரசாணை 318-ஐ செயல் படுத்திட உடனடி நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும். பல தலைமுறை களாக அடிமனைகளில் வீடு கள், சிறுகடைகள் கட்டி பயன் படுத்தி வருபவர்களை “ஆக் கிரமிப்பாளர்கள்” என்ற பெயரில் வெளியேற்றும் நட வடிக்கையை கைவிட வேண்டும்.
காலம் காலமாக கோயில் நிலங்களில் குத்தகை சாகு படி செய்யும் ஏழை விவசாயி களை “மறு ஏலம்” என்ற பெய ரில் நிலத்தை விட்டு வெளி யேற்றுவதை கைவிட வேண் டும். குத்தகை விவசாயி களுக்கு ஆர்டிஆர் பதிவு செய்து தர வேண்டும். அற நிலைய சட்டப்பிரிவு 34ன்படி பல தலைமுறைகளாக குடி யிருப்பவர்கள், சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அந்தந்த இடங்களுக்குரிய நியாயமான விலையை தீர்மானித்து அவர்களுக்கு சொந்தமாக்கிட வேண்டும்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்த மான கட்டிடங்களில் சிறு, குறு, கடை வைத்து வணிகம் செய்துவரும் பயனாளி களுக்கான வாடகை நிர்ண யத்தை சந்தை மதிப்பீட்டின் படி தீர்மானிக்காமல், அவர் களின் வணிக நிலைமை களை கணக்கில் கொண்டு தீர்மானிக்க வேண்டும்” உள் ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி உள்ளனர்.