districts

img

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்க!

திருச்சிராப்பள்ளி, டிச,13- ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையில் ஒன் றிய பாஜக அரசு மின்சார வாரியத்தை தனியார்மய மாக்கும் நோக்கத்தோடு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்துமாறு மாநில அரசுகளை நிர்ப்பந்திக் கிறது. ஒன்றிய அரசைக் கண்டித்தும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை  தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிக்கக் கோரியும் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் மின்வாரிய அலுவலகங்க ளில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. திருச்சி மன்னார்புரம் மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட் டத்திற்கு தமிழ்நாடு  மாவட்ட செயலாளர் கார்த்திகே யன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச்செய லாளர் சங்கர், மாவட்ட பொருளாளர் தனபால் ஆகியோர் பேசினர். பின்னர் அதிகாரியிடம் மனு கொடுத்தனர். கும்பகோணம்  கும்பகோணம் மாநக ராட்சி நால்ரோடு அருகில் உள்ள மின்சார வாரிய அலு வலகம் முன்பு ஒன்றியச் செய லாளர் ராஜா தலைமையில்  மனு கொடுக்கும் போராட் டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட துணை செயலாளர் கொளஞ் சியப்பன் மற்றும் நிர்வாகி கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மின்வாரிய துணை செயற் பொறியாளரி டம் மனு கொடுக்கப்பட்டது.