districts

img

திருத்துறைப்பூண்டியில் கண் சிகிச்சை முகாம்

திருத்துறைப்பூண்டி, அக்.8 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நூற்றாண்டு அரிமா சங்கம் சார்பில் கண் சிகிச்சை முகாம் நடை பெற்றது.  முகாமை அரிமா சங்க சாசனத் தலைவர் மருத்துவர் அரிமா.முகமது ஆரிப் தொடங்கி வைத்தார். முகாமிற்கு நூற்றாண்டு அரிமா சங்க தலைவர் சண்முகா டிம்பர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். சங்க செயலாளர் சிவ குருநாதன் வரவேற்றார். 17வது வார்டு கவுன்சிலர் ரமேஷ் மற்றும் ஆதிரெங்கம் ஊராட்சி மன்றத் தலைவர் வீரசேகர் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் அரிமா.வி.எஸ். ரகு நன்றி கூறினார். முகாமில் 185 பேர் கலந்து கொண்ட நிலையில், 45 பேர் அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.