தஞ்சாவூர், ஆக.11-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உடைய நாடு அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் வீரியங்கோட்டை ராஜ ராஜன் பள்ளியில், மாணவர் களுக்கான இலவச கண் பரிசோ தனை முகாம் நடைபெற்றது.
பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம், வீரியங்கோட்டை ராஜராஜன் கல்வி நிறுவனம் மற்றும் தஞ்சாவூர் வாசன் ஐ கேர் இணைந்து நடத்திய, கண் பரிசோதனை முகா மிற்கு கோக்கனட் சிட்டி இன்ஸ்ப யர் லயன்ஸ் சங்கத் தலைவர் ஏ.எஸ்.ஏ. தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். செயலா ளர் ஜீ.வி.நடராஜன் வரவேற் றார். முகாமில் 900-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முழு கண் பரிசோதனை செய்யப்பட் டது. இதில், 48 பேர் மேல் சிகிச் சைக்கு பரிந்துரை செய்யப்பட்ட னர். ஏற்பாடுகளை லயன்ஸ் சங்கப் பொருளாளர் து.சிவா னந்தம், நிர்வாக அலுவலர் டி. குமரன் ஆகியோர் செய்திருந்த னர்.