திருச்சிராப்பள்ளி, மார்ச் 25- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், உணவுப் பொருள் மீது உள்ள ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் என் பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி ஏப்ரல் 5 அன்று தில்லி யில் நடைபெற உள்ளது. இதனொரு பகுதியாக பேரணி விளக்க மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் சிஐடியு சார்பில் திருச்சி மாந கரில் 6 இடங்களில் வெள்ளி யன்று நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ராகவேந்திரா ஆர்ச் அருகே சிஐடியு மாந கர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், திருவானைக் காவலில் சிஐடியு ஒருங்கி ணைப்பாளர் ரகுபதி, அம்மா மண்டபத்தில் சாலைப் போக்குவரத்து சங்க மாவட்ட செயலாளர் சந்திரன், மாம்ப ழச் சாலையில் சாலைப் போக்குவரத்து ஸ்ரீரங்கம் பகுதி ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணி, செக்போஸ்ட் அரு கில் தரைக்கடை சங்க கோவிந் தன், தேவி தியேட்டர் ஆட்டோ சங்க அமைப்பு செயலாளர் வெற்றிச்செல் வம் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, ஆட்டோ சங்க பகுதி பொரு ளாளர் முத்து, கட்டுமான சங்க பகுதி செயலாளர் அண்ணாமலை உள்ளிட் டோர் பங்கேற்றனர்.