districts

img

100 நாள் வேலைத் திட்டத்தை விரிவுபடுத்திடுக! மாதர் சங்கம் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜூன் 16- திருச்சி புறநகர் மாவட்டம் தா.பேட்டை ஒன்றிய அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோணங்கிப் பட்டி கிளை மாநாடு செவ்வா யன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றிய தலைவர் தேவி தலைமை வகித்தார். சங்க கொடியை சின்னம்மாள் ஏற்றினார். மாவட்டத் தலைவர் லிங்க ராணி, ஒன்றியச் செயலாளர் மரகதம் ஆகியோர் சிறப் புரையாற்றினார். கோணாங்கிப்பட்டியில் பழுந்தடைந்த குடிநீர் தொட்டி யை சீரமைத்து சீராக குடிநீர் வழங்க வேண்டும். சிதிலம டைந்து கிடக்கும் பொதுக் கழிப்பிடத்தை சீரமைக்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தை இப் பகுதிக்கும் விரிவுப்படுத்தி வேலை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதில் செயலாளராக சு.மணிமேகலை, தலைவ ராக எஸ்.பாரதி பொருளாள ராக எஸ்.பிரேமா மற்றும் 11 பேர் கொண்ட புதிய கிளை  நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர்.