அரியலூர், மார்ச் 3- ஒன்றிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் அறியப் படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் ஒன்றிய அரசின் நலத்திட்டங்கள் குறித்த கண்காட்சி அரியலூர் அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் தொடங்கியது. கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தொடக்கி வைத்து, பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். கள விளம்பர அலுவலர் கே.தேவி பத்மநாபன் வரவேற்றார். கள விளம்பர உதவியாளர் க.ரவிச்சந்திரன் நன்றி கூறினார். நிகழ்வில், மத்திய மக்கள் தொடர்பக சென்னை மண்டல இயக்குநர் ஜெ.காமராஜ், கல்லூரி முதல்வர் ஜெ.மலர்விழி, மாவட்ட சித்த அலுவலர் எஸ்.காமராஜ், கிராம சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய அலுவலர் ரவிச்சந்திரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட மாவட்ட அலுவலர் க.அன்பரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.