அரியலூர், ஏப்.11 - சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தலுக்காக அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணியை தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா, தேர்தல் பொது பார்வையாளர் போர் சிங் யாதவ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதேபோல் ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, சிதம்பரம் மற்றும் குன்னம் ஆகிய வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்ற பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மி ராணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.