கும்பகோணம், அக்.8- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் அருகே உள்ள நாச்சியார்கோ வில் ஊராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 1949 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரு கிறது. இங்கு படித்த முன்னாள் மாண வர்கள் அரசு மற்றும் தனியார் துறை களில் சிறந்து விளங்கி வருகின்றனர். தற்போது இப்பள்ளியில் விளை யாட்டு மைதானம், உடற்பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால், மாண வர்கள் சேர்க்கை குறைந்து வரு கிறது. இந்நிலையில் பள்ளியின் வளர்ச்சிக்காக, முன்னாள் மாண வர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குழு ஒன்றை துவங்கி, பள்ளிக்குத் தேவையான உதவிகள், உபகர ணங்கள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவற்றை வழங்கி, மாண வர்கள் சேர்க்கை அதிகரிப்பில் பெரும் முயற்சி எடுத்து வருகின்ற னர். இந்தப் பள்ளியின் 75-வது ஆண்டு வைர விழாவையொட்டி, பள்ளிக்கு அருகில் உள்ள பயன்பாட்டில் இல்லாத தஞ்சாவூர் அரண்மனை சத்திரத்திற்கான இடத்தை மாவட்ட ஆட்சியர் வழங்க வேண்டும். பள்ளிக்கு நூலகம், ஆய்வ கக்கூடம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சுவர், தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாக அலுவலக அறை, கழிப்பறை வசதிகளை செய்து தர வேண்டும். மைதானத்திற்கு இடம் வழங்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டுமென வலியுறுத்தி திருவிடைமருதூர் சட்ட மன்ற உறுப்பினரும் தமிழ்நாடு அரசு தலைமை கொறடாவுமான கோவி. செழியனிடம், முன்னாள் மாண வர்கள் மற்றும் பள்ளி வளர்ச்சி குழுவின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கோரிக்கைகளை ஏற்று சட்ட மன்ற உறுப்பினர் கோவி.செழியன், பள்ளி கல்வித்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர், அமைச்சர்களுக்கு பரிந்துரை கடிதத்தை அனுப்பி நட வடிக்கை எடுக்கப்படும் என தெரி வித்தார்.