திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் திண்டுக்கல் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்து கள்ளிமந்தையம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் அமைச்சர் அர.சக்கரபாணி பிரச்சாரம் மேற்கொண்டார். அனைத்து கிராமங்களிலும் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமான பெண்கள் உட்பட கிராம மக்கள் அணிதிரண்டு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.