தஞ்சாவூர், ஜூலை 28-
தஞ்சாவூர் மாநகராட்சியில் ரூ.133.58 கோடியில் முடிவுற்ற 12 பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன் பாட்டுக்கு வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
திருச்சியில் நடைபெற்ற வேளாண் சங்கமம் நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை மதியம் தஞ்சாவூருக்கு வருகை தந்தார். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப் பட்டுள்ள மாநாட்டு மையத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மாநக ராட்சியில் ரூ.133 கோடியே 56 லட்சம் மதிப்பில் முடிவுற்றப் பணிகளை பொது மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் திறந்து வைத்தார்.
மேலும், மாநகராட்சி பொது நிதியி லிருந்து மாநகராட்சி ஆணையர் குடியிருப்பு கட்டிடம் கட்ட ரூ.1 கோடியில் அடிக்கல் நாட்டப் பட்டுள்ளது. தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வந்த வர்களை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வரவேற்றார். மாநகராட்சி மேயர் சண்.ராம நாதன் நன்றி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பி, எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழி யன், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.