தஞ்சாவூர், டிச.25- மழை, வெள்ள பேரிடரைத் தடுக்க நவீன தொழில்நுட்பங்களை கையாள் வதற்கு வழிவகை செய்ய வேண்டு மென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தஞ்சை மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவர் முனைவர் கலைவாணி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் வி.முருகானந்தம் வரவேற்றார். தஞ்சை மாவட்டக் கருவூல அலுவ லர் ஜி.கணேஷ்குமார் மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி, குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி பேராசிரியர் இராசு.தமிழடியான் ஆகியோர், ‘சமூக மாற்றத் திற்கான அறிவியல்’ என்ற தலைப்பில் கருத்துரையாற்றினர். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் லெ.முருகன், வரவு-செலவு அறிக்கையை மாவட்டப் பொரு ளாளர் வீ.ராஜசேகர் சமர்ப்பித்தனர். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேரா. மாரியப்பன் தீர்மானங்களை முன்மொ ழிந்தார். தொழிற்சாலை கழிவுகள், ஆறுகள் மற்றும் ஏனைய நீர்நிலைகளில் கலப்பதை தடை செய்து நீரின் தூய்மை உறுதிப் படுத்தப்பட வேண்டும். எதிர்கால தலை முறையினருக்கு அறிவியல் மனப்பான் மையுடன் இனம், மொழி, சாதி, சமய வேறுபாடுகள் நீங்கும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். மழை மற்றும் வெள்ளக் காலங்க ளில், நவீன அறிவியல் தொழில்நுட்பத் துடன்கூடிய புதிய யுக்திகளை பயன் படுத்தி நீரை சேமிக்க வழிவகைகள் செய்யப்பட வேண்டும். அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களுக்கும் மாண வர்களுக்கும், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினருக்கும் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிப்பதை கட்டா யப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டில் வரும் இரண்டு ஆண்டு களுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து, மாநில துணைத்தலைவர் பேராசிரியர் வெ.சுகுமாரன் நிறை வுரையாற்றினார். மாவட்டத் தலைவராக எஸ்.கார்த்தி கேயன், மாவட்டச் செயலாளராக எல். முருகன், மாவட்டப் பொருளாளராக வீ.ராஜசேகர், துணைத் தலைவர்களாக பேரா.மாரியப்பன், வயலூர் முருகானந் தம், வழக்கறிஞர் அருணாதேவி, மாவட்டத் துணைச் செயலாளர்களாக மஞ்சுளா, ரவிச்சந்திரன், தியாகராஜன் ஆகியோரும், மாநில பொதுக்குழு உறுப்பினராக வி.நாராயணசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அறிவி யல் இயக்கத்தின் வானவில் கருத்தா ளர்கள் பங்கேற்றனர். கிளைகளின் பொறுப்பாளர்கள் அடங்கிய 75 மாவட்ட பொதுக்குழு உறுப் பினர்கள், அதிலிருந்து 45 செயற்குழு உறுப்பினர்களும், 15 நிர்வாகக் குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட னர்.