districts

img

இல்லம் தேடி கல்வி பணியாளர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்குக!

பெரம்பலூர், டிச.27 - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பெரம்பலூர் மாவட்ட மாநாடு புத னன்று ரோவர் ஆர்ச் அருகே உள்ள லட்சுமி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் தா.லோகநாதன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் பி.பாஸ்கரன் தலைமை வகித்தார். மாநில பொறுப் பாளர் எம்.மாணிக்கத்தாய் துவக்க  உரையாற்றினார். லட்சுமி மருத்துவ மனை நிர்வாகி சி.கருணாகரன், மாவட்ட  கௌரவத் தலைவர் சா.சின்னசாமி ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலச்  செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் நிறைவுரை ஆற்றினார். மாவட்டச் செய லாளர் ஆ.ராமர் அறிக்கை வாசித்தார்.  ‘மந்திரமா தந்திரமா’ எனும் தலைப் பில் துரை.தாமேதரன் விளக்க உரை யாற்றினார்.  தமிழ்நாட்டிலேயே பெரம்பலூர் மாவட்டத்தில் பால் உற்பத்தி அதிக மாக இருப்பதால், தீவன உற்பத்தி மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நதியின் உபரி நீரை முசிறி வழியாக நீர்வழித் தடத்தை  ஏற்படுத்தி, பெரம்பலூர் மாவட்டத்தை மையமாக வைத்து ஜெயங்கொண்டம் கொள்ளிடத்திற்கு சென்றடைய கால் வாய் அமைக்க வேண்டும். இந்த கால் வாய் மூலமாக குறைந்தது ஆயிரம் ஏரி கள், ஒரு லட்சம் பாசன வயல்கள் பயன் பெறும். இதை மாவட்ட நிர்வாகம் அரசுக்கு கோரிக்கையாக வைக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை முழு மையாக ரத்து செய்ய வேண்டும். சிறந்த  அறிவியல் ஆய்வாளர்களுக்கு வழங்கப் பட்ட விஞ்ஞானிகள் விருதை ஒன்றிய அரசு மீண்டும் வழங்க வேண்டும். இல்லம் தேடி கல்வி, வானவில் மன்றம்  போன்றவற்றில் பணியாற்றும் பெண்க ளுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை  கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.