மயிலாடுதுறை, பிப்.5- மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்விளக்க பிரச்சார விழிப்புணர்வு நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட தரங்கம்பாடி, பொறையார், திருக்களாச்சேரி, இலுப்பூர், எரவாஞ்சேரி, அரும்பாக்கம் உள்ளிட்ட மக்கள் அதிக கூடும் பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரத்தில், எப்படி வாக்களிப்பது என பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு வாகனம் நிறுத்தப்பட்டு, அதில் உள்ள ஒலி-ஒளி திரை யுடன், மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் உதவி யுடன் இந்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர்கள் அருள்மொழி, சுதாகர், உதவியாளர்கள் அசோக்குமார், ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.