districts

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை மின் வாரியமே ஏற்று நடத்த வேண்டும்

திருச்சிராப்பள்ளி, செப்.9- ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை மின்  வாரியமே ஏற்று நடத்த வேண்டுமென கோரி செப்.21 இல் தர்ணா போராட் டம் நடத்த மின் ஊழியர் மத்தியமைப்பு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருச்சி – தஞ்சை மண்ட லக் குழு கூட்டம் திருச்சி வெண்மணி  இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் எஸ்.ரெங்கராஜன் தலைமை  வகித்தார். மாநில பொதுச் செயலா ளர் எஸ்.ராஜேந்திரன் சிறப்புரையாற்றி னார். திருச்சி மண்டல செயலாளர் எஸ். அகஸ்டின், திருச்சி மாநகரச் செய லாளர் எஸ்.கே.செல்வராஜ், வட்டச் செயலாளர்கள் புதுக்கோட்டை கே.நட ராஜன், திண்டுக்கல் ஆர்.திருமலை சாமி, பெரம்பலூர் எம்.பன்னீர்செல் வம், தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேஷன் உதவிப் பொதுச் செயலாளர் எம்.இருதயராஜ் ஆகி யோர் பேசினர். கூட்டத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை  மின்வாரியமே ஏற்று நடத்த வேண்டும்.  இ-டெண்டர் முறையில் அவுட்சோர்சிங்  விடுவதை ரத்து செய்ய வேண்டும்.  காலிப் பணியிடங்களை நிரப்ப  வேண்டும். கேங்மேன் ஊழியர்களுக் கான சலுகைகள், விருப்ப மாறுதல் பெற்றிட வேண்டும்.  ஒப்பந்த ஊழியர்,  பகுதிநேர ஊழியர்களை பணி நிரந்தரப் படுத்த வேண்டும். பணியாளர்களின் இரட்டிப்பு ஊதி யம், மருத்துவ செலவினங்கள், வருங் கால வைப்புநிதி முன்கடன், இருசக்கர வாகன கடன், வீடு கட்டும் முன் பணம் ஆகியவற்றிற்கு உரிய காலத்தில் நிதி  ஒதுக்கீடு செய்ய வேண்டும். 1.12.2019 க்கு பின் 16.5.2023க்கு முன் மின்வாரிய  பணியில் சேர்ந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு பலன் வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி செப்டம்பர் 21 அன்று  மண்டல அளவிலான முழுநேர தர்ணா  போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தஞ்சை மண்டல செய லாளர் ராஜாராமன், வட்ட செயலா ளர்கள் தஞ்சை காணிக்கைராஜ், நாகை  கலைச்செல்வன், திருவாரூர் ராஜேந்திரன்  உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்நாடு மின் ஊழியர்  மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரனிடம் கட்டிட நிதி வழங்கப்பட்டது.