கரூர், மார்ச் 13 - சூரிய மின் திட்டத்தை செயல்படுத்த மின் ஊழி யர்களை நிர்பந்திக்க கூடாது என வலியுறுத்தி கரூர் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின் வாரியத்தில் உள்ள 110, 230, 400, 765 கே.வி. துணைமின் நிலையங்களில் இஇ, ஏஇஇ மற்றும் ஏஇ பதவிகளை ரத்து செய்யக் கூடாது. டான்ஜெட்கோவை பிரிக்கும் தமிழக அரசின் அரசாணையை திரும்ப பெற் றிட வேண்டும். ஓய்வூதியர் கள் மற்றும் பணியாளர் களுக்கு பாதுகாப்பில்லா மல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந் தத்தை ரத்து செய்ய வேண்டும். பிரதமரின் சூரிய மின் திட்டத்தை செயல்படுத்த மின் ஊழியர்களை நிர்பந்திக்க கூடாது. தொழில் நுட்ப வளர்ச்சி என்ற பெய ரால் மொபைல் ஆப் மூலம் கணக்கீடு செய்ய கணக்கீட்டு பிரிவு ஊழியர் களுக்கு டேப் மற்றும் சிம் கார்டு நெட்வொர்க் வசதி யுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி கரூர்- கோவை சாலையில் உள்ள மின் வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவ லகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் துணைத் தலை வர் சுப்பிரமணி தலைமை வகித்தார். கரூர் மண்டல செயலாளர் க.தனபால் கண்டன உரையாற்றினார். துணை தலைவர்கள் கோ பாலகிருஷ்ணன், ஈஸ்வரன், நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.