districts

img

மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

மின் வாரியத்தில் ஒப்பந்தத் திற்கு மாறாக இ-டெண்டர் முறை யில் ஊழியர்களை நியமிப்பதை ரத்து செய்ய வேண்டும். இ-டெண் டரை ரத்து செய்து மின் வாரியத் தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக  பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு, வாரியமே தினக்கூலி வழங்கி நிரந்தரம் செய்ய வேண்டும்.

காலிப் பணியிடங்களை உடன டியாக நிரப்ப வேண்டும். அவுட் சோர்சிங் முறையை கைவிட  வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்ட த்தை கைவிட வேண்டும். 10 ஆண்டு களுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப் படுவர் என்ற தேர்தல் வாக்குறு தியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு மின்  ஊழியர் மத்திய அமைப்பு சார்பில்  வெள்ளியன்று போராட்டம் நடை பெற்றது.

திருச்சி மன்னார்புரம் மின்வா ரிய மேற்பார்வை பொறியாளர் அலு வலக வளாகத்தில் நடைபெற்ற  போராட்டத்திற்கு சங்க மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். கோரிக் கைகளை விளக்கி நிர்வாகிகள் பேசினர். 

பெரம்பலூர்

பெரம்பலூர் நான்குரோடு மேற்பார்வை பொறியாளர் அலு வலகம் முன்பு பெரம்பலூர் வட்டக் கிளை சார்பில் தர்ணா நடை பெற்றது. சிஐடியு மாநிலச் செயலா ளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் எம். பன்னீர்செல்வம், பொருளாளர் கே.கண்ணன். மாநில செயற்குழு  உறுப்பினர் பி.இளங்கோவன், ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சிஐடியு மாவட் டத் தலைவர் அ.ரெங்கநாதன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பி.கிருஷ்ணசாமி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கோட்டச் செயலாளர் ஆர்.கண்ணன் நன்றி கூறினார்.  

நாகப்பட்டினம்

நாகை மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு  நடைபெற்ற தர்ணாவிற்கு மாவட் டத் தலைவர் என்.வெற்றிவேல் தலைமை வகித்தார். நாகை திட்டச் செயலாளர் எம்.கலைச்செல்வன், திட்ட இணை செயலாளர் எஸ்.சிவ ராஜன், பொருளாளர் எம்.கண்ணன், சிஐடியு மாவட்டச் செய லாளர் கே.தங்கமணி, சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம். குருசாமி, சு.மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.