வேதாரண்யம், ஜன.30 - நாகப்ட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மறைஞாநல்லூர் மூர்த்தியன் காடு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அவரது வீட்டில் மனைவி மற்றும் தாயார் இருந்துள்ள னர். 20 ஆண்டுகளாக குண சேகரன் வீட்டிற்கு அருகில் மின்சார லைன் சென்றது. கஜா புயலில் வேதாரண்யம் பகுதி முழுவதும் மின்சார கம்பி மற்றும் மின்சார மரங்கள் பாதிக்கப்பட்டன. அப்போது போர்க்கால அடிப்படையில் வேதா ரண்யம் நகராட்சி மூலமாக வேதாரண்யம் மின்சார வாரி யம் குணசேகரனின் இரண்டு வீட்டிற்கும் இடையில் மின்சாரக் கம்பம் நடப்பட்டு, மின் கம்பிகள் கொண்டு செல்லப்பட்டன. குணசேகரன் சொந்த ஊருக்கு வந்து பார்க்கும் போது, வீட்டிற்கு அருகில் மின் கம்பி தவறாக கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து வேதா ரண்யம் மின்சார அலுவல கத்தில் நேரில் சென்று கேட்ட போது, “இது தற்காலிகமாக கொண்டு செல்லப்பட்டுள் ளது. மீண்டும் பழைய மாதிரி கொடுக்கப்படும்” என அதி காரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் 20.9.2021 அன்று காலை 6 மணியளவில் குண சேகரனின் இரு வீட்டுக்கும் இடையில் உள்ள மின்கம்பி அறுந்து விழுந்தது. இதில் குணசேகரன் அதிர்ஷ்டவச மாக உயிர் தப்பினார். உடன டியாக வேதாரண்யம் மின் சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், இது வரை அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என குணசேகரன் வேதனையுடன் தெரிவித்தார்.