districts

img

தேர்தல் முன்னேற்பாடு பணிகள் திருச்சி தொகுதி பொது பார்வையாளர் ஆய்வு

புதுக்கோட்டை, மார்ச் 28 - தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து, மாவட்ட அளவிலான ஒருங் கிணைப்பு அலுவலர்களுடனான ஆய்வுக்  கூட்டம், திருச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் எம்.தினேஷ்குமார் தலைமையில் வியாழக்கிழமை  நடைபெற்றது.   கூட்டத்தில் பறக்கும்படை குழு, நிலை யான கண்காணிப்பு குழு, வீடியோ கண்கா ணிப்பு குழு உள்ளிட்ட குழுக்களின் செயல்பா டுகள் மற்றும் பறிமுதல் செய்த பணம் உள்ளிட்ட இதரப் பொருட்களின் விபரம் குறித்தும், தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக மையம், ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு செயல்பாடுகள் குறித்தும்,  சமூக ஊடகங்கள் குறித்தும், வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி மற்றும் விவி பேட் இயந்திரங்களின் இருப்பு விபரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா, காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே,  மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) எஸ். வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;