விருதுநகர், ஜூன் 16-
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தல் முதி யோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். அப்போது அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இதையடுத்து, ஆட்சியர் கூறுகை யில், முதியோர்களை அரவணைப்போடு பராமரிக்க வேண்டும். மனோரீதியாகவும், உடல் ரீதியாகவும் தாக்குதல் கூடாது. தகாத வார்த்தைகளை அவர்களிடம் உபயோகித்தல் கூடாது. பொது இடங்களான மருத்துவமனை, பேருந்து, வங்கிகள் ஆகியவற்றில் முதியோர் களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.